மில்கோ நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. அதனால்தான் இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான வரியை குறைத்துள்ளது என எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் சீ.பி.ரத்நாயக்க தெரிவித்தார்.
கூட்டு எதிர்க்கட்சியின் பொருளாதார ஆய்வுபிரிவு நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில்,
தேசிய பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை அதிகரிப்பதற்கும் மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்தில் நான் கால்நடை அபிவிருத்தி அமைச்சராக இருக்கும் போது நடவடிக்கை எடுத்திருந்தேன். குறிப்பாக பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்ததுடன் மில்கோ நிறுவனத்தை நல்ல நிலைக்கு கொண்டுவந்தோம். அத்துடன் ஒரு லீற்றர் பாலுக்கான விலையை 67ரூபாவாக நிர்ணயித்திருந்தோம்.
மேலும் பாலின் தேவைப்பாட்டை மக்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்தோம். குறிப்பாக காலையில் கடைக்கு வருபவர்கள் பால் போத்தல் ஒன்றை கட்டாயம் எடுத்துச்செல்லும் நிலை அன்று ஏற்பட்டிருந்தது. வைத்தியசாலைகளில் பாலின் தேவை அதிகரித்திருந்தது. அதேபோன்று உற்பத்தி அதிகரித்தபோது பாடசாலை மாணவர்களுக்கு இலவச பால்கோப்பை வழங்கி தேசிய பால் உற்பத்தியாளர்களை நஷ்டப்படுத்தவில்லை.
ஆனால் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின்பு தேசிய பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அத்துடன் இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான வரியை 45 ரூபா வரை குறைத்துள்ளதுடன் தேசிய ரீதியில் உற்பத்தி செய்யப்பட்ட பாலை விலைக்கு வாங்காமல் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து பாலைப் பெறும் வேலைத்திட்டத்தை மேற்கொண்டு வருகின்றது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை காரணமாக மில்கோ நிறுவனத்தின் பால் லீற்றர் கணக்கில் நாளாந்தம் கொட்டப்படுகின்றது.
எனவே அரசாங்கம் மில்கோ நிறுவனத்தை நஷ்டமடையச்செய்து, அதனைக் காரணமாக காட்டி அந் நிறுவனத்தை விற்பனை செய்யும் வேலைத்திட்டத்தையே மேற்கொண்டு செல்கின்றது. இதனால் தேசிய பால் உற்பத்தியாளர்கள் பாரியளவில் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM