வெலிகந்த பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரியின் வங்கிக் கணக்குகளை முடக்க உத்தரவு

26 Mar, 2025 | 12:38 PM
image

மாடுகள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில்  பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள வெலிகந்த பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரிக்கு சொந்தமான  வங்கிக் கணக்குகளை  முடக்குமாறு பொலன்னறுவை நீதவான் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை (25) உத்தரவிட்டுள்ளது.

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள வெலிகந்த பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி நீதிமன்ற உத்தரவை மீறி பிரதேசத்தைவிட்டுத் தப்பிச் சென்ற தலைமறைவாக இருப்பதாக அநுராதபுரம் பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்ததையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

அனுமதிப்பத்திரம் இன்றி வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட 20 மாடுகளை அரசுக்குச் சொந்தமான மாட்டுப் பண்ணையில் ஒப்படைக்குமாறு பொலன்னறுவை நீதவான் நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 23 ஆம் திகதி  உத்தரவிட்டிருந்தது.

இதன்போது வெலிகந்த பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய ஆர்.எம் . ரத்நாயக்க கைப்பற்றப்பட்ட  20 மாடுகளையும் அரசுக்குச் சொந்தமான மாட்டுப் பண்ணையில் ஒப்படைக்காமல் கடத்தல்காரர்களிடமே மீண்டும் ஒப்படைத்துள்ளார். 

இதனையடுத்து வெலிகந்த பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரியை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு பொலன்னறுவை நீதவான் நீதிமன்றம் கடந்த 11 ஆம் திகதி உத்தரவிட்டது.

ஆனால் வெலிகந்த பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி நீதிமன்ற உத்தரவை மீறி பிரதேசத்தைவிட்டுத் தப்பிச் சென்ற தலைமறைவாக உள்ளார்.

எனவே வெலிகந்த பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரிக்கு சொந்தமான  வங்கிக் கணக்குகளை முடக்குமாறு இலங்கை மத்திய வங்கிக்கு பொலன்னறுவை நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டொன் பிரியசாத் உயிரிழக்கவில்லை என்கிறார் பொலிஸ்...

2025-04-22 23:28:46
news-image

தபால் மூல வாக்களிப்பின் போது அரச...

2025-04-22 20:33:09
news-image

பொருளாதார முகாமைத்துவத்துக்கு அமைச்சரவையால் விசேட குழு...

2025-04-22 17:33:04
news-image

டொன் பிரியசாத் துப்பாக்கிச் சூட்டில் காயம்!

2025-04-22 21:53:35
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியை அறிவிக்கும்...

2025-04-22 17:23:42
news-image

உள்ளூராட்சி மன்றங்களில் ஊழல், மோசடிகளுக்கு ஒருபோதும்...

2025-04-22 17:27:08
news-image

மாத்தறை சிறையில் குழப்பம் : அதிகாரிகள்...

2025-04-22 21:21:49
news-image

கட்டான பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2025-04-22 21:37:42
news-image

மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்...

2025-04-22 20:39:13
news-image

யாழ் . மாநகர சபையில் யாருக்கு...

2025-04-22 17:17:05
news-image

பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட மகனை பார்க்கசென்ற தமிழ்...

2025-04-22 20:04:55
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான பேராயரின்...

2025-04-22 17:25:48