தென்பகுதி அர­சியல் தலை­வர்­க­ளுக்கு அமைச்சர் மனோ அறி­வுரை

Published By: Robert

19 Jun, 2017 | 09:43 AM
image

தென்­ப­கு­தி­யி­லுள்ள அர­சியல் தலை­வர் கள் யாழ்தேவியில் யாழ்ப்­பாணம் சென்று வட­மா­காண முத­ல­மைச்சர் விக்கி­னேஸ்­வ­ர­னிடம் பாடம் படிக்க வேண்டும் என்று தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான மனோ கணேசன் கூறி­யுள்ளார்.

கொழும்பில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற நிகழ்­வொன்றில் உரை­யாற்­றிய அவர் இது­கு­றித்து மேலும் தெரி­வித்­த­தா­வது,

வட­மா­காண முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ராக தெற்கில் சிங்­கள பெரும்­பான்­மை­யினத் தலை­வர்கள் பெரும் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­தனர். அவரை திட்டித் தீர்த்­தனர். அவரை பிரி­வி­னை­வாதி என்றும் பயங்­க­ர­வாதி என்றும் புலி என்றும் குற்­றம்­சாட்­டினர். ஆனால் வட­மா­காண முத­ல­மைச்சர் தற்­போது மேற்­கொண்­டுள்ள நட­வ­டிக்கை சக­ல­ருக்கும் முன்­னு­தா­ர­ண­மாக திகழ்­கின்­றது.  வட­மா­காண சபை­யி­லுள்ள நான்கு அமைச்­சர்­க­ளுக்கு எதி­ராக குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டன. இத­னை­ய­டுத்து முத­ல­மைச்சர் விக்­கினேஸ்­வரன் குற்­றச்­சாட்­டுக்­களை கண்டு மௌன­மாக இருக்­க­வில்லை. கண்­டும் ­கா­ணா­மலும் இருக்­க­வில்லை. விசா­ரணைக் குழு­வொன்­றினை அமைத்து உரிய கால எல்­லைக்குள் விசா­ரணை அறிக்­கையை பெற்று தற்­போது அதற்­கான தீர்ப்­பையும் வழங்­கி­யுள்ளார்.  

இரண்டு அமைச்­சர்­களை வீட்­டுக்குப் போகு­மாறு கூறி­யுள்ள அவர் மற்­றைய இரண்டு அமைச்­சர்கள் மீதும் முழு­மை­யான விசா­ரணை நடை­பெறும் என்றும் அது­வரை விடு­மு­றையில் வீட்­டுக்குச் செல்­லு­மாறும் பணித்­துள்ளார். இவ்­வாறு செயற்­ப­டு­வ­தற்கு அவ­ருக்கு அதி­காரம் இருக்­கின்­றதா இல்லை யா என்­பதை விவா­திப்­பதில் பிர­யோ­சனம் இல்லை. அது சட்டப் பிரச்­சி­னைக்கு உட்­பட்­ட­தாகும். ஆனாலும் ஜன­நா­யக ரீதியில் அர­சியல் ரீதி­யாக அவ­ருக்கு அந்த உரிமை இருக்­கின்­றது. விக்கி­னேஸ்­வ­ரனின் இத்­த­கைய செயற்­ப­டா­னது ஏனைய மாகாண சபை­க­ளுக்கும் அமைச்­சர்­க­ளுக்கும் தென்­ப­குதி அர­சியல் தலை­வர்­க­ளுக்கும் சிறந்த உதா­ர­ண­மாக திகழ்­கின்­றது.  

இதனால் யாழ்தேவி பிடித்து யாழ்ப்­பா­ணத்­திற்குச் சென்று வட­மா­காண முத­ல­மைச்சர் விக்கினேஸ்வரனிடம் தென் பகுதி அரசியல் தலைவர்கள் டியூசன் படிக்க வேண்டும். விக்கினேஸ்வரனின் நடவடி க்கை காரணமாகவே மக்கள் அவர் பக்கம் நிற்கின்றனர். மனோ கணேசனான நானும் இதனால்தான் அவர் பக்கம் இருக்கின்றேன் என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரணில் - சஜித் கூட்டணி பேச்சுவார்த்தை...

2025-02-08 23:33:26
news-image

அரசியலமைப்பு விடயங்களை பிற்போட்டால் மாகாணசபைகளை செயற்படுத்த...

2025-02-08 23:32:15
news-image

வலியுறுத்திய விடயங்கள் வரவு - செலவுத்...

2025-02-08 16:55:07
news-image

சட்டமா அதிபருக்கு அரசாங்கம் அழுத்தம் பிரயோகிப்பது...

2025-02-08 16:54:04
news-image

மாகாண சபைத் தேர்தல் குறித்து அரசியல்...

2025-02-08 17:10:39
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை செயற்படுத்த...

2025-02-08 16:53:41
news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக் கொள்ள...

2025-02-08 15:46:50
news-image

பாடசாலை அதிபரை கடத்திச் சென்று தாக்கி...

2025-02-08 17:33:13
news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக்கொள்ள முடியாது...

2025-02-08 23:30:32
news-image

நுவரெலியா - தலவாக்கலை மார்க்கத்தில் ஈடுபடும்...

2025-02-08 17:12:01
news-image

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர் பிரதமர் ஹரிணியை சந்தித்து...

2025-02-08 14:53:14
news-image

பொலன்னறுவையில் விபத்து ; ஒருவர் பலி...

2025-02-08 16:36:31