'நூறு மலர்கள் மலரட்டும்' : கோண்டாவில் இந்து கல்லூரியில் புத்தக அரங்க விழா

25 Mar, 2025 | 07:01 PM
image

தேசிய கலை இலக்கியப் பேரவையின் 50ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 'நூறு மலர்கள் மலரட்டும்' என்ற தொனிப்பொருளில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் புத்தக அரங்க விழாவின் 24ஆவது நிகழ்வு எதிர்வரும் 28, 29, 30ஆம் திகதிகளில் கோண்டாவில் இந்து கல்லூரியில் நடைபெறவுள்ளது.

மார்ச் 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இப்புத்தக அரங்க விழாவின் தொடக்க நிகழ்வாக வயிரமுத்து திவ்வியராஜன் ஆக்கத்தில் உருவான 'ஒரு சின்னக்கதை' பாகம் 2 மற்றும் 'சாவை தள்ளி வை' ஆகிய நூல்களின் வெளியீட்டு நிகழ்வு ஆசிரியரும் பட்டிமன்ற நடுவருமான த.ஸ்ரீபிரகாஸ் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் வெளியீட்டுரையினை ஜீவநதி சஞ்சிகை மற்றும் வெளியீட்டகத்தின் பிரதம ஆசிரியர் கலாமணி பரணீதரனும், 'சாவை தள்ளி வை' நூல் தொடர்பான அறிமுக உரையினை ஈழத் தமிழ் கலைஞர் ஒன்றியத்தின் தலைவர் வைத்திய நிபுணர் சி.சிவன்சுதனும், 'ஒரு சின்னக்கதை' பாகம் 2 பற்றிய கருத்துரைகளை சட்டத்தரணி பசுபதி ஐங்கரன், ஓய்வுநிலை ஆசிரியர் விஜயா பீரிஸ், சி.மகாலிங்கம், அ.குணசிங்கம், வ.மோகநாதன், தேவ சபா அனுஜன், ஸ்ரீபாலன் சிந்துசன், மாதங்கி யாதவன், சசிகா நித்தியானந்தம், பகீரதன் நிரூசன் ஆகியோரும் நிகழ்ச்சித் தொகுப்பினை மாணவி தர்மிகா உமாசுதசர்மாவும் மேற்கொள்ளவுள்ளனர்.

விசேட கலை நிகழ்வுகளாக கனிஸ்ரனின் நெறியாள்கையில் கே.ஏ.எஸ்.சத்தியமனை நூலக மாணவர்களின் 'வெற்றி வெற்றி' இசைக் கூத்தும், செம்முகம் ஆற்றுகைக் குழுவினரின் தயாரிப்பில் சீலனின் எழுத்துரு, நெறியாள்கையில் 'எங்கே எங்கே குடை எங்கே?', 'எலியார் எங்கே போனார்?' ஆகிய சிறுவர் நாடகங்களும் நடைபெறவுள்ளன.

மேலும், இந்நிகழ்வின் விசேட அம்சமாக   மாபெரும் புத்தகக் கண்காட்சியும் மலிவு விற்பனையும் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களும் காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை பாடசாலை மண்டபத்தில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பீலியடி நடன காளி அம்மன் ஆலயத்தின்...

2025-04-20 17:45:51
news-image

கொழும்பில் தேசிய மக்கள் சக்தியின் காரியாலயம்...

2025-04-19 17:40:29
news-image

 "காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்"...

2025-04-19 14:33:42
news-image

தமிழ்நாடு ஆளுநர் விருதைப் பெற்ற சொற்பொழிவாளர்...

2025-04-19 14:14:04
news-image

அன்னை பூபதியின் 37 ஆவது நினைவுதினம்...

2025-04-19 12:29:15
news-image

கொழும்பு விவேகானந்தா சபையின் ஆசிரிய வாண்மை...

2025-04-19 11:17:03
news-image

இலங்கையில் முதன் முறையாக நடைபெறவுள்ளது Media...

2025-04-18 11:57:34
news-image

அகிலமெங்கும் ஒலித்திடும் சிவநெறிய திருமுறை விண்ணப்பம்...

2025-04-17 17:42:43
news-image

தெஹிவளை விஷ்ணு கோயிலில் புதுவருட தின...

2025-04-17 15:55:25
news-image

ஜேர்மனியில் சர்வதேச விருது விழா

2025-04-17 18:58:20
news-image

'இயேசு ஜீவிக்கிறார்“ சர்வதேச சுவிசேஷ பணிமனையின்...

2025-04-16 12:54:39
news-image

கொழும்பு செட்டியார் தெரு ஸ்ரீ முத்து...

2025-04-16 07:03:22