"சிவாகம கலாநிதி" தானு மஹாதேவ குருக்களின் ஆத்ம சிவப்பிராப்திக்கு இறை பிரார்த்தனை செய்வதாக இந்துக் குருமார் அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்துக் குருமார் அமைப்பு மேலும் தெரிவிக்கையில்,
எமது விப்ரசிரேஷ்டராக, அந்தணர்களின் உயர்வுக்கு குருகுல கல்வி முதல் பல்வேறு வழிகளில் பங்காற்றிய பெருந்தகை இன்று சிவபதமடைந்தார் என அறிந்து மிகவும் கவலை அடைந்தோம்.
பல்மொழி ஆளுமை மிக்கவராக, அன்புடன் அனைவரையும் அரவணைக்கும் பண்பாளராக திகழ்ந்தவர். யார் எந்த உதவி கேட்டாலும் உடனே தயங்காமல் வழிவகுப்பார். ஓர் ஆசான் எப்படி வாழ வேண்டும் என முன்னுதாரணமாக வாழ்ந்தவர்.
இந்தியாவில் உள்ள ஆதீனங்கள், குருகுல அதிபர்கள் உள்ளிட்ட பெரியோரது அன்புக்கும் மரியாதைக்கும் போற்றுதலுக்கும் உரியவராக திகழ்ந்தவர்.
அண்மையில் தருமை ஆதீன 27வது நட்சத்திர குருமணிகள் நட்சத்திர குருமணிகளால் "சிவாகம கலாநிதி" எனும் சிறப்புடன் கௌரவம் வழங்கப்பட பெருந்தகை. இக்கௌரவத்தினை இந்திய துணை தூதுவர் குருக்கள் அவர்களின் இல்லம் தேடி சென்று வழங்கிமை குறிப்பிடத்தக்கது.
யாவரும் இறை நியதியை ஏற்க வேண்டிய சூழ்நிலை.
அமரரது ஆத்ம சிவப்பிராப்திக்கு அன்பே உருவான பரம்பொருளின் பாதம் பணிந்து பிரார்த்தனை செய்கிறோம். அத்துடன் உறவுகளுக்கு எமது ஆறுதலை இந்துக் குருமார் அமைப்பு சார்பில் பகிர்ந்துகொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM