இலங்கையின் பொருளாதார மீள் எழுச்சிக்கு உதவுமாறு அமெரிக்க தூதுவரிடம் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இருவருக்கும் இடையே திங்கட்கிழமை (24) இடம்பெற்ற சந்திப்பின்போதே இதனை மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மேலும் அங்கு மனோ கணேசன் அமெரிக்க தூதுவரிடம் கூறுகையில், அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையேயான கொள்கைகள் ஒன்றையொன்று தழுவிச்செல்ல வேண்டும். மலையக மக்களின் காணி உரிமை, வீட்டு உரிமை, தேசிய நல்லிணக்கம், புதிய அரசியலமைப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, காணிகள் விடுவிப்பு, இராணுவம் மீள் - அழைப்பு, காணாமல்போனோர் அலுவலகம், உண்மை ஆணைக்குழு தொடர்பில் தேசிய சக்தி அரசாங்கத்தின் கொள்கைகளில் இன்னும் தெளிவில்லை என்றார்.
அதற்கு அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்,
இன்று இலங்கையின் பொருட்களை அதிகமாக வாங்கும் நாடாக அமெரிக்கா இருக்கிறது.
அமெரிக்காவுக்கு இலங்கையின் ஏற்றுமதி பெறுமானம் 16 பில்லியன் டொலர். ஆனால், இறக்குமதி 370 மில்லியன் டொலர். ஆகவே, இறக்குமதியை அதிகரிக்கும்படி ட்ரம்ப் நிர்வாகம் இலங்கைக்கு கூறலாம்.
அத்துடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தின் அமெரிக்காவுக்கான பயணத் திட்டம் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டார்.
கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவரின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு உறுப்பினர் பாரத் அருள்சாமி, அமெரிக்கத் தூதரக அரசியல் அதிகாரி செச் லோன்ஸ், அரசியல் நிபுணர் சந்தீப் குரூஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதனையடுத்து, இந்த சந்திப்பு தொடர்பாக மனோ கணேசன் தெரிவித்ததாவது :
இன்று அமெரிக்காவுக்கு இலங்கை 16 பில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. இது இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் 23 விகிதம் என்பதுடன், இலங்கை பொருட்களை அதிகமாக வாங்கும் நாடாக அமெரிக்காவே இருக்கிறது.
இந்நிலையில் இலங்கை அமெரிக்காவிடமிருந்து ஆக 370 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களையே வாங்குகிறது. இலங்கைக்கு சார்பாக இருக்கும் இந்த வர்த்தகம் தொடர்பில், அமெரிக்காவிடமிருந்து அதிகமான பொருட்களை இலங்கை வாங்க வேண்டும் என அமெரிக்காவின் புதிய டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் எதிர்பார்க்கலாம் என அமெரிக்க தூதுவர் தெரிவித்தார்.
குறிப்பாக அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் ஆடை ஏற்றுமதி பொருட்களுக்கான பருத்தி ஆடை மூலப் பொருளை இலங்கை, அமெரிக்காவிடமிருந்து அதிகமாக வாங்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
மலையக மக்கள் தொடர்பான காணி உரிமை, வீட்டு உரிமை விவகாரங்கள் பற்றி என்.பி.பி. அரசாங்கள் தெளிவான பார்வையை கொண்டிருக்கவில்லை. எனினும் இது தொடர்பில் அவசியமான நெருக்குதல்களை கொடுத்து, நாம் கட்சியாக 2015ஆம் ஆண்டு முதல் ஆரம்பித்த காணி, வீட்டு உரிமை பயணத்தை தொடர அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க முடிவு செய்துள்ளோம் என நான் அமெரிக்க தூதுவரிடம் கூறினேன்.
தேசிய நல்லிணக்கம், புதிய அரசியலமைப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, காணிகள் விடுவிப்பு, இராணுவம் மீள்-அழைப்பு, காணாமல் போனோர் அலுவலகம், உண்மை ஆணைக்குழு ஆகிய விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் முன்னுரிமை வழங்காமல், முதலில் பொருளாதார சீரமைப்பு என்ற விவகாரத்துக்கே முன்னுரிமை அளிக்கிறது.
ஆனால், நாம் பொருளாதார சீரமைப்பு, தேசிய விவகாரம் ஆகிய இரண்டையும் சமாந்தரமாக முன்னெடுக்கும்படி அரசை கோருகிறோம் என நான் அமெரிக்க தூதுவரிடம் கூறினேன்.
மேலும், வெளிநாட்டு முதலீடு, சுற்றுலா வருவாய், ஏற்றுமதி முதலிய விடயங்கள் தொடர்பாகவும் பரஸ்பர கருத்துக்களை பகிர்ந்துகொண்டோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM