இறக்குமதி செய்யப்பட்ட சிரி ஸ்கேன் இயந்திரம் 6 வாரங்களாக சுங்க பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது ; கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம்

24 Mar, 2025 | 08:19 PM
image

(செ.சுபதர்ஷனி)

களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலைக்காக இறக்குமதி செய்யப்பட்ட சிரி ஸ்கேன் இயந்திரம் கடந்த 6 வாரங்களாக சுங்க பிரிவில் விடுவிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத் தலைவர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்தார்.

மேற்படி விடயம் தொடர்பில்  திங்கட்கிழமை (24) அவர் ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலைக்காக இறக்குமதி செய்யப்பட்டுள்ள சுமார் 1500 இலட்சம் ரூபா பெறுமதிமிக்க சிரி ஸ்கேன் இயந்திரம் கடந்த பெப்ரவரி 14 ஆம் திகதி நாட்டை வந்தடைந்தது.

எனினும் தற்போது 6 வாரங்கள் கடந்துள்ள நிலையில் இவ்வியந்திரம் சுங்கப் பிரிவிலிருந்து விடுவிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. 

சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளும் இது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. bகுறித்த இயந்திரத்தை விடுவிக்க ஒரு மில்லியன் ரூபா சுங்கப்பிரிவுக்கு செலுத்தப்பட வேண்டும் எனவும் அதிகாரிகளால் கணக்கிடப்பட்டுள்ளது. 

2021 ஆம் ஆண்டு இயந்திரத்தை கொள்வனவுக்கான விலைமனுக் கோரல் தொடர்பான ஆவணங்கள் உரிய நிறுவனத்திடம் கையளிக்கப்பட்ட போதும், பிற நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. 

எவ்வாறெனினும் நீண்ட காலத்திற்குப் பின்னர் அவ்வியந்திரம் நாட்டை வந்தடைந்துள்ளது. 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலையில் இருந்த சிரி ஸ்கேன் இயந்திரம் செயலிழந்தது.

இன்றுவரை அவசர பரிசோதனைக்காக நோயாளர்கள் அருகில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படுவதுடன், ஏனைய நோயாளர்கள் ஹோமாகம, களுபோவில, ஹொரன உள்ளிட்ட வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். 

இதனால் நோயாளர்களும் வைத்தியசாலை ஊழியர்களும் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதுடன். தனியார் மருத்துவமனையில் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக பெருமளவான தொகையை செலவிட வேண்டியுள்ளது.

அத்தோடு இது போன்ற உயர் தொழில்நுட்ப இயந்திரங்களை நீண்ட நாட்களுக்கு சுங்கப்பிரிவில் தடுத்து வைத்திருப்பதால் இயந்திரத்தின் பாகங்கள் சேதமடையக்கூடும். 

ஆகையால் இயந்திரத்தை உடனடியாக சுங்கப் பிரிவிலிருந்து விடுவித்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாத தடைச்சட்டம், நிகழ்நிலை காப்பு சட்டம்...

2025-04-30 17:52:20
news-image

எரிபொருள் விலைகளில் திருத்தம் !

2025-04-30 20:39:27
news-image

லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமில்லையாம் !

2025-04-30 20:27:40
news-image

இலங்கை - பாகிஸ்தான் இருதரப்பு பாதுகாப்பு...

2025-04-30 17:50:20
news-image

வாக்காளர் அட்டைகள் கடைகளில் மீட்பு ;...

2025-04-30 17:34:40
news-image

வெள்ளவத்தை பொதுச்சந்தை பகுதியில் தேசிய மக்கள்...

2025-04-30 18:06:00
news-image

கண்டி - கம்பளை பிரதான வீதியில்...

2025-04-30 17:28:22
news-image

முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் நீண்டகால பிரச்சினைகளை...

2025-04-30 17:38:11
news-image

தொழிற்சங்க நடவடிக்கை முன்னேடுக்க தயாராகும் தெல்லிப்பளை...

2025-04-30 17:13:54
news-image

டெங்கு நோயால் 6 பேர் உயிரிழப்பு 

2025-04-30 17:13:07
news-image

பாதுகாப்பு செயலாளர் - பாகிஸ்தான் இராணுவத்...

2025-04-30 17:01:17
news-image

மயிலத்தமடு விவசாயிகளின் பிரச்சினைக்கு நீதி கோரி...

2025-04-30 18:23:51