மின்சார சட்ட திருத்தம் தொடர்பில் மின்சக்தி - நிதி அமைச்சுகளுக்கிடையில் முரண்பாடு - அஜித் பி பெரேரா

24 Mar, 2025 | 04:41 PM
image

(எம்.மனோசித்ரா)

மின்சார சட்ட திருத்தம் தொடர்பில் நிதி அமைச்சிற்கும் மின்சக்தி அமைச்சிற்குமிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. மின்சக்தித் துறை மறுசீரமைப்பு நாட்டுக்கு தகுந்த வகையில் இடம்பெற வேண்டும். ஆனால் அரசாங்கம் பழைய பாதையிலேயே பயணிக்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

களுத்துறை பிரதேசத்தில்  திங்கட்கிழமை (24) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மின்சார சட்ட திருத்தம் தொடர்பில் நிதி அமைச்சிற்கும் மின்சக்தி அமைச்சிற்குமிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. 

ஜனாதிபதித் தேர்தலின் போது ஒரு விடயத்தையும் தற்போது இன்னொரு விடயத்தையும் கூறுகின்றனர். நாட்டின் மின்சக்தி துறை மறுசீரமைக்கப்பட வேண்டும். 

இத்துறையில் தேசிய மற்றும் சர்வதேச முதலீடுகள் ஈர்க்கப்பட வேண்டும். அரசாங்கத்தால் மாத்திரம் இத்துறையை நவீனமயப்படுத்த முடியாது.

மின்சாரத்துறை நவீனமயப்படுத்தல் நாட்டுக்கு நன்மை பயக்கும் வகையில் அமைய வேண்டும். ஊழியர்களின் தொழில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். 

அரச சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். மறுசீரமைப்பின் போது இந்த விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அதனை விடுத்து மீண்டும் பழைய நிலைமைக்கே செல்லக் கூடாது. ஆனால் அரசாங்கம் பழைய பாதையிலேயே திரும்ப பயணிக்கின்றது.

அதானி நிறுவனத்தின் காற்றாலை மின்உற்பத்தி திட்டம் ஊழல் நிறைந்தது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. விலைமனு கோரப்பட வேண்டும் என்று நாட்டில் சட்டம் காணப்படும் நிலையில், விலைமனு கோரல் இன்றி அந்த நிறுவனத்துக்கு இந்த திட்டம் வழங்கப்பட்டுள்ளமை தவறாகும். 

இந்த திட்டத்திலிருந்து அதானி விலகினாலும், கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய அபிவிருத்தி திட்டத்திலிருந்து விலகவில்லை.

இவ்வாறு அதானி நிறுவனத்தைத் தவிர வேறு எந்த வெளிநாட்டு முதலீட்டாளர்களும் நாட்டுக்கு வரவில்லை. கடந்த காலங்களில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களித்தவர்களே இம்முறை தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்திருக்கின்றனர். 

கடந்த தேர்தல்களில் பொதுஜன பெரமுன வேட்பாளர்களை களமிறக்கவில்லை. ஆனால் இம்முறை அவ்வாறல்ல. அவர்களது வாக்குகள் மீண்டும் அவர்களுக்கே கிடைக்கப் பெறும்.

அந்த வகையில் இம்முறை பொதுஜன பெரமுன சுமார் 15 சதவீத வாக்குகளையேனும் பெற்றுக் கொண்டால், தேசிய மக்கள் சக்தியின் வாக்குகளில் அது குறைவடையும். அதேவேளை எமது வாக்குகளில் ஒன்று கூட பொதுஜன பெரமுனவுக்கு கிடைக்காது.

அந்த வகையில் நாம் உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கு சிறப்பாக தயாராகி வருகின்றோம். ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களை விட இம்முறை தேர்தலில் சிறந்த வெற்றியைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டொன் பிரியசாத் உயிரிழக்கவில்லை என்கிறார் பொலிஸ்...

2025-04-22 23:28:46
news-image

தபால் மூல வாக்களிப்பின் போது அரச...

2025-04-22 20:33:09
news-image

பொருளாதார முகாமைத்துவத்துக்கு அமைச்சரவையால் விசேட குழு...

2025-04-22 17:33:04
news-image

டொன் பிரியசாத் துப்பாக்கிச் சூட்டில் காயம்!

2025-04-22 21:53:35
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியை அறிவிக்கும்...

2025-04-22 17:23:42
news-image

உள்ளூராட்சி மன்றங்களில் ஊழல், மோசடிகளுக்கு ஒருபோதும்...

2025-04-22 17:27:08
news-image

மாத்தறை சிறையில் குழப்பம் : அதிகாரிகள்...

2025-04-22 21:21:49
news-image

கட்டான பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2025-04-22 21:37:42
news-image

மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்...

2025-04-22 20:39:13
news-image

யாழ் . மாநகர சபையில் யாருக்கு...

2025-04-22 17:17:05
news-image

பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட மகனை பார்க்கசென்ற தமிழ்...

2025-04-22 20:04:55
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான பேராயரின்...

2025-04-22 17:25:48