உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய இரு தற்கொலை குண்டுதாரிகள் தொடர்பான தகவல்களை மறைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வர்த்தகர் மொஹமட் இப்ராஹிமுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணையை எதிர்வரும் ஜூலை மாதம் 02 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (24) உத்தரவிட்டள்ளது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய இரு தற்கொலை குண்டுதாரிகள் தொடர்பான தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடமிருந்து மறைத்ததாக குற்றம் சாட்டி கொழும்பு, தெமட்டகொடை மஹவில பகுதியில் வசிக்கும் வர்த்தகர் மொஹமட் இப்ராஹிம் மற்றும் அவரது இரண்டு மகன்களுக்கு எதிராக சட்டமா அதிபரால் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் நவரத்ன மாரசிங்க முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது , இந்த வழக்கின் இரண்டாவது சாட்சியாளரான குறித்த வர்த்தகரின் வீட்டில் பணிபுரியும் பெண் வெளிநாடு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, மற்றுமொரு சாட்சியாளரும் வெளிநாடு செல்ல இருப்பதாகவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்ட நீதவான், வெளிநாடு சென்ற சாட்சியாளருக்கு புதிய அழைப்பாணையை பிறப்பிக்க உத்தரவிட்டதுடன், குறித்த சாட்சியாளரின் வெளிநாட்டு பயணம் தொடர்பான அறிக்கையை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் இருந்து பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM