கொழும்பு - கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவலகம் வீதி பகுதியில் கடந்த 17 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கிராண்ட்பாஸ் பொலிஸாரால் ஞாயிற்றுக்கிழமை (23) கைது செய்யப்பட்டுள்ளார்.
கிராண்ட்பாஸ் - நாவலகம் வீதி பகுதிக்கு கடந்த 17 ஆம் திகதி இரவு 09.40 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் மோட்டார் சைக்கிள்களின் உதிரிப்பாகங்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றில் இருந்த இரண்டு நபர்கள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றிருந்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இருவரும் சிகிச்சைகாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்டப்டனர்.
இது தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இருவரின் தொலைபேசிகளை பயன்படுத்தி துப்பாக்கிதாரிகளை சம்பவ இடத்திற்கு வரவழைத்ததாக கூறப்படும் சந்தேக நபர் இரண்டு தொலைபேசிகளுடன் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இதுவரை மூன்று சந்தேக நபர்களும் பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM