(ஆர்.யசி )
நாடளாவிய ரீதியில் பரவிவரும் டெங்கு நோய் பரவல் காரணமாக இதுவரையில் 177 பேர் உயிரிழந்துள்ளதுடன் 63ஆயிரத்திற்கும் அதிகமான நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். டெங்கு நோயை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதாரதுறை மற்றும் இராணுவம் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அதே நிலையில் உயர்தரத்திலான புகைவிசிறல் இயந்திரங்களை ஜேர்மனியில் இருந்து பெற்றுக் கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் பல்வேறு நோய்கள் பரவிவரும் நிலையில் டெங்கு நோயின் பரவல் அதிகரித்து வருகின்றது. நாடாளாவிய ரீதியில் பரவிவரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரையில் 177 பேர் உயிரிழந்துள்ளதுடன் 63 ஆயிரத்து 987 பேர் இதுவரையில் இனங்காணப்பட்டுள்ளனர். அதேபோல் பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் கொழும்பு முதலாவதாக இனங்காணப்பட்டுள்ளது. கொழும்பில் மாத்திரம் இதுவரையில் 14 ஆயிரத்து, 187 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
மேலும் டெங்கு நோயை ஒழிக்க சுகாதார சேவையாட்களுடன் இணைந்து இராணுவத்தினரின் உதவி பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாகவும் டெங்கு நோயளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றமையினால், குப்பைகளை அகற்றும் நடவடிக்கைக்கு இராணுவத்தினரின் உதவி பெறப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அதேபோல் இலங்கையின் செயற்பாடுகளுக்கு அப்பால் உயர்தரத்திலான புகைவிசிறல் இயந்திரங்களை ஜேர்மனியில் இருந்து பெற்றுக் கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM