தொல்பொருள் பெறுமதிமிக்க பாதுகாப்பு வனப்பகுதிக்குள் சட்டவிரோதமான முறையில் உட்புகுந்து புதையல் தோண்டிய சந்தேக நபர்கள் மூவரை அநுராதபுரம் சிவலாக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் சிவலாக்குளம் பொலிஸார் நேற்று சனிக்கிழமை (22) ஹல்மில்லவெவ பகுதியில் நடத்திய சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் மூவரை கைது செய்துள்ளதுடன், புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 29,37,48 வயதுடைய மிஹிந்தலை மற்றும் கலன்பிந்துனுவெவ, படிகாரமடுவ பகுதியை வசிப்பிடமாக கொண்டவர்கள் என்பது ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் சிவலாக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் அநுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM