ஏப்ரல் 8இல் அரச சொத்துக்களை மீட்பதற்கான சட்டமூலம் சமர்ப்பிக்கப்படும் - சந்தன சூரியாராச்சி எம்.பி தெரிவிப்பு

23 Mar, 2025 | 04:20 PM
image

(நமது நிருபர்)

கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்களின் கீழ் சட்டவிரோதமாக கையகப்படுத்தப்பட்ட அரச சொத்துக்களை மீட்பதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாராச்சி தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கடந்த காலங்களில் இருந்த ஆட்சியாளர்கள் நாட்டின் அரச வளங்களை முறைகேடாக பயன்படுத்தினார்கள். அதுமட்டுமன்றி அவற்றை தமது சொந்தச் சொத்துக்களாகவும் கையகப்படுத்தியுள்ளனர்.

அவ்வாறான நிலையில், நாங்கள் அளித்த வாக்குறுதிக்கு அமைவாக அவற்றை மீளப்பெற்று அரச வளங்களை பாதுகாப்பதற்கான செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளோம்.

அரச வளங்களை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் பெறப்பட்ட சொத்துக்கள் மற்றும் நிதிகளை சட்டப்பூர்வமாக பறிமுதல் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ள சட்டமூலமான எதிர்வரும் ஏப்ரல் 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஆட்சியாளர்களும் அவர்களது சகபாடிகளும் பொது சொத்துக்களை தனிப்பட்ட சொத்துக்களாக்கியுள்ளனர். இதற்கு பல்வேறு சான்றுகள் எம்மிடத்தில் உள்ளன. அவ்விதமான நிலையில் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்படுகின்ற போது அது பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கு வழி சமைக்கும்.

பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும் ஊழலை எதிர்த்துப் திறம்பட போராடுவதற்கும் எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதை உறுதியாகக் கொண்டுள்ளது. ஆகவே அந்த விடயத்தில் யாரும் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். வல்வெட்டித்துறையில் டெங்கு பரக்கூடிய சூழலை...

2025-04-26 11:56:16
news-image

கண்டி - யாழ்ப்பாணம் வீதியில் விபத்து...

2025-04-26 11:45:37
news-image

யாழ்.பருத்தித்துறையில் சுகாதர சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு...

2025-04-26 12:02:41
news-image

கட்டுநாயக்க துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்...

2025-04-26 12:33:10
news-image

லுனுகம்வெஹெர பகுதியில் கஞ்சா செடிகளுடன் இருவர்...

2025-04-26 10:34:34
news-image

உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின்...

2025-04-26 10:26:27
news-image

தந்தை செல்வாவின் 48ஆவது நினைவு தினம்!

2025-04-26 11:22:06
news-image

அம்பேவல பகுதியில் ரயிலில் மோதி ஒருவர்...

2025-04-26 11:55:15
news-image

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் மறைவுக்கு நாமல்...

2025-04-26 11:29:32
news-image

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக இருவர் சுட்டுக்கொலை...

2025-04-26 10:11:10
news-image

வயலில் வேலை செய்துகொண்டிருந்த வயோதிபர் மின்னல்...

2025-04-26 09:49:35
news-image

இலங்கைக்கு வருகை தரவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின்...

2025-04-26 09:34:16