(நமது நிருபர்)
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் காலத்தில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் வன்முறை சம்பவங்களைக் குறைப்பதற்கும் அதிகாரிகள் வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயற்படுத்தி வருகின்றனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு தெரிவித்ததோடு அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொலிஸாரின் தேர்தல் பிரிவு, தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் நாடு தழுவிய வன்முறை நடவடிக்கைகள் குறித்த அறிக்கைகளை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. அனைத்து சம்பவங்களும் பதிவு செய்யப்படுகின்றன. எந்தவொரு மீறல்களுக்கும் எதிராக நாங்கள் உடனடி நடவடிக்கை எடுத்து வருகிறோம்,
தற்போதைய பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, உள்ளுராட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் போது சிறப்பு முன்னெச்சரிக்கைகள் செயற்படுத்தப்பட்டன.
தற்போது, வழக்கமான பொலிஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன, தேர்தல் நாள் நெருங்கும்போது பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் கூடுதல் பாதுகாப்புக்கான பொலிஸ் குழுக்களை கடமையில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளோம்.
கொழும்பில் வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதை மேற்பார்வையிடுவது உட்பட, தேர்தல் நடவடிக்கைகளைப் பாதுகாக்கும் பணியை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றார்கள்.
தேர்தல் காலத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களைத் தடுப்பதற்கு அளிக்கப்படும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. வன்முறை சம்பவங்களைக் குறைப்பதற்காக, பொலிஸாரின் சிறப்புப் படை மற்றும் முப்படை வீரர்கள் போன்ற சிறப்புப் பிரிவுகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுகின்றன என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM