பேஸ்புக் களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட இளம் யுவதிகள் உட்பட 76 பேர் நேற்று சனிக்கிழமை (22) இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
சீதுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிடிகொட பெல்லனவத்த பகுதியில் ஹோட்டல் ஒன்றில் இளைஞர்கள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேஸ்புக் களியாட்ட நிகழ்வு நேற்றையதினம் இரவு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றிவளைப்பில் 15 இளம் யுவதிக உட்பட 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஐஸ், கேரளா கஞ்சா ஆகிய போதைப்பொருட்கள் மற்றும் சிகரெட்டுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை வைத்திருந்த 03 பெண்களும் 14 ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்தோடு, இந்த களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட 12 இளம் பெண்கள் மற்றும் 47 இளைஞர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் 18 முதல் 25 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் கொழும்பின் புறநகர்ப் பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM