பாதாள உலக கும்பலைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் காரர் ஒருவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்த சந்தேக நபர் ஒருவரின் வீட்டிலிருந்து தோட்டாக்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று வெள்ளிக்கிழமை (21) கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் வெலிகம, கொக்மாதுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சோதனை நடவடிக்கையின் போது சந்தேக நபரான வீட்டின் உரிமையாளர் வீட்டில் இருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வீட்டிலிருந்து 5.56 x 45 M-16 ரக தோட்டாக்கள் 6, 7.62 x 39 T-56 ரக தோட்டாக்கள் 60, 7.62 x 39 T-56 ரக தோட்டாக்கள் 9, வாள் ஒன்று, மோட்டார் சைக்கிள் இலக்கத்தகடுகள் 4 மற்றும் இராணுவத் துப்பாக்கி பயிற்சி புத்தகம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM