வேட்புமனு நிராகரிப்பு எதிராக சட்டநடவடிக்கை - விஸ்வலிங்கம் மணிவண்ணன்

Published By: Vishnu

21 Mar, 2025 | 11:48 PM
image

எமது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் உபசெயலாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் வெள்ளிக்கிழழமை (21) ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் கூட்டணியானது பல்வேறு சபைகளுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தது. அந்த வகையில் யாழ்ப்பாணத்தில் மூன்று சபைகளுக்கான வேட்பு மனுக்களும், கரைச்சி பிரதேச சபைக்கான வேட்புமனும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் குறிப்பாக யாழ்.மாநகர சபைக்கான வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமைக்கான காரணமாக வியாழக்கிழமை (20) 2023ஆம் ஆண்டு 31ஆம் இலக்க உபபிரிவு மூன்று சட்ட ஏற்பாட்டின் பிரகாரம், பெண் உறுப்பினர் ஒருவரின் சத்தியப்பிரமாண உறுதியுரைக்காக கையொப்பம் இல்லாமையால் நிரகாரிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

அதேபோன்று வலிகாமம் தெற்கு பிரதேசத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுவில் இளம் வேட்பாளர்களின் பிறப்புச்சான்றிதழ் முறையாக உறுதிப்படுத்தப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இதேபோன்று தான் பருத்தித்துறை மற்றும் கரைச்சிப் பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.  இளம்வேட்பாளர்களை உறுதிப்படுத்துவதாக இருந்தால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட அதிகாரியால் அது மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான குறித்த அதிகாரியொருவர் குறிப்பிடப்படவில்லை. அதேநேரம், நல்லூர் பிரதேச சபையில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வேட்பு மனுவில் ஒருவரின் விடயம் தவறாக இருந்தமையால் அவருடைய வேட்பு மனு மட்டும் நீக்கப்பட்டு விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆகவே எமது விடயத்தில் ஒட்டுமொத்தமாக நிராகரிப்புச் செய்வதற்கும் ஏனைய தரப்பினருக்கு வேறுவிதமாக நடைபெறுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன்...

2025-04-21 09:02:07
news-image

இன்றைய வானிலை

2025-04-21 06:17:24
news-image

சாவகச்சேரியில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் இளைஞர்...

2025-04-21 02:33:37
news-image

யாழில் சங்கிலி அறுத்த குற்றச்சாட்டில் நால்வர்...

2025-04-21 02:14:25
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற போது...

2025-04-20 21:29:43
news-image

ஜனாதிபதிக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி...

2025-04-20 21:22:18
news-image

ஜனாதிபதி அநுரகுமார ட்ரம்ப்பை நேரடியாக சந்தித்து...

2025-04-20 21:25:53
news-image

உடுத்துறையில் வாள்வெட்டு தாக்குதல்; குடும்பஸ்தர் படுகாயம்!

2025-04-20 21:25:46
news-image

ஊழல் அரசியலில் ஈடுபட்டவர்கள் தற்போது குழப்பமடைந்துள்ளனர்...

2025-04-20 21:20:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அரசியல் மயப்படுத்தி...

2025-04-20 20:54:36
news-image

யாழில் மூதாட்டி ஒருவர் பொல்லால் தாக்கி...

2025-04-20 21:20:24
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதியின்...

2025-04-20 18:30:01