மத்திய தபால் சேவை பரிமாற்று நிலையத்தில் ஒரு கோடியே 78 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு

21 Mar, 2025 | 09:21 PM
image

(செ.சுபதர்ஷனி)

மத்திய தபால் சேவை பரிமாற்று நிலையத்துக்கு வந்திருந்த சந்தேகத்திற்கிடமான சரக்குப் பொதிகளில் இருந்து சுமார் ஒரு கோடி 78 இலட்சம் ரூபா பெறுமதிமிக்க போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மத்திய தபால் சேவை பரிமாற்று நிலையத்திற்கு கிடைத்த சந்தேகத்திற்கிடமான 20 சரக்கு பொதிகளை சுங்க தபால் மதிப்பீட்டுப் பிரிவு அதிகாரிகள் திறந்து பார்த்து சோதனைக்கு உட்படுத்திய போதே மேற்படி போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடந்த இரு வார காலப்பகுதியில் பிரான்ஸ், அமெரிக்கா, கனடா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து விமான தபால் சேவையின் மூலம் குறித்த சரக்கு பொதிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சுங்க பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், கண்டி, நீர் கொழும்பு, ஜா-எல, வெள்ளவத்தை, நுகேகொடை, தங்கல்ல, மஹியங்கனை மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முகவரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

எனினும், இரு வாரங்கள் கடந்தும் சரக்குப் பொதியின் உரிமையாளர்கள் அவற்கை பெற்றுக்கொள்ள முன் வராத காரணத்தினால், கடந்த புதன்கிழமை (19) தபால்மா அதிபரின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் அவற்றை திறந்து பார்த்து சோதனைக்குட்படுத்தியிருந்தனர்.

இதன்போது, 14 சரக்குப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த  272 கிராம் குஷ் மற்றும் 2,049 போதை மாத்திரைகள் என்பன அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தைப்பெறுமதி சுமார் ஒரு  கோடி 78 இலட்சம் ரூபா என சுங்க பிரிவினரால் மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேற்படி சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டொன் பிரியசாத் உயிரிழக்கவில்லை என்கிறார் பொலிஸ்...

2025-04-22 23:28:46
news-image

தபால் மூல வாக்களிப்பின் போது அரச...

2025-04-22 20:33:09
news-image

பொருளாதார முகாமைத்துவத்துக்கு அமைச்சரவையால் விசேட குழு...

2025-04-22 17:33:04
news-image

டொன் பிரியசாத் துப்பாக்கிச் சூட்டில் காயம்!

2025-04-22 21:53:35
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியை அறிவிக்கும்...

2025-04-22 17:23:42
news-image

உள்ளூராட்சி மன்றங்களில் ஊழல், மோசடிகளுக்கு ஒருபோதும்...

2025-04-22 17:27:08
news-image

மாத்தறை சிறையில் குழப்பம் : அதிகாரிகள்...

2025-04-22 21:21:49
news-image

கட்டான பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2025-04-22 21:37:42
news-image

மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்...

2025-04-22 20:39:13
news-image

யாழ் . மாநகர சபையில் யாருக்கு...

2025-04-22 17:17:05
news-image

பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட மகனை பார்க்கசென்ற தமிழ்...

2025-04-22 20:04:55
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான பேராயரின்...

2025-04-22 17:25:48