உரிமைகளிற்கான எங்களின் போராட்டத்தை இனவாதமாக அர்த்தப்படுத்தவேண்டாம் என நாங்கள் தென்னிலங்கை மக்களை கேட்டுக்கொள்கின்றோம் என தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்களில் ஒருவரான சுகுமார் சாருஜன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நில உரிமைகளிற்கான மக்கள் கூட்டமைப்பின் ( பார்ள்) ஏற்பாட்டில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உட்பட பல அரசாங்கங்கள் எங்கள் நிலங்களை எங்களிடம் தருவதாக உறுதியளித்தன.
ஆனால் இது தொடர்பான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இலங்கையின் அரசமைப்பின் ஊடாக பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள அங்கீகாரமே இந்த விவகாரம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்க முடியாதமைக்கு காரணம் என நாங்கள் கருதுகின்றோம்.
இவை எங்கள் மூதாதையர்களின் நிலங்கள்,அங்குள்ள பௌத்த ஆலயத்தின் மதகுரு கூட இந்த நிலம் எங்களிற்கு சொந்தமானது என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஆனால் அவர் இதனை பொதுவெளியில் தெரிவிக்க தயங்குகின்றார்.
எங்களின் இந்த போராட்டம் சிங்கள மக்களிற்கோ அல்லது பௌத்தமதத்திற்கோ எதிரானது இல்லை.எங்கள் நிலங்களை மீளப்பெறுவதற்காகவே நாங்கள் போராடுகின்றோம்.
உரிமைகளிற்கான எங்களின் போராட்டத்தை இனவாதமாக அர்த்தப்படுத்தவேண்டாம் என நாங்கள் தென்னிலங்கை மக்களை கேட்டுக்கொள்கின்றோம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM