ஜப்பான் இலங்கையின் ஏற்றுமதியை ஆதரிப்பதற்காக 300 மில்லியன் ஜென் மதிப்புள்ள தீயணைப்பு வாகனங்களை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.
ஜப்பான் அரசாங்கம் 300 மில்லியன் ஜென் மதிப்புள்ள இலங்கை அரசாங்கத்திற்கு உயர்தரமான ஜப்பானிய தீயணைப்பு வாகனங்களை மானிய உதவியின் மூலம் வழங்க முடிவு செய்துள்ளது.
இது நாட்டின் ஏற்றுமதி செயல்மிகு மண்டலங்களில் பேரழிவுகளை எதிர்கொள்ளும் திறனை வலுப்படுத்தி, ஒரு பாதுகாப்பான வர்த்தக சூழலை உருவாக்குவதோடு பொருளாதார மற்றும் சமூக நிலைத்தன்மைக்கு உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் வியாழக்கிழமை (20) கொழும்பில் இந்த மானிய உதவியை தொடர்பாக ஜப்பான் தூதர் அகியோ இசோமடா மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டுத் துறை செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டு புரிந்துணர்வு கடிதங்களை பரிமாறிக் கொண்டனர்.
ஏற்றுமதி செயல்மிகு மண்டலங்கள் இலங்கையின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பதோடு, முதலீடுகளை ஈர்க்கவும் தொழில் வளர்ச்சியை முன்னேற்றவும் உதவுகின்றன.
தீ விபத்துகள் மற்றும் பிற அவசரநிலை சம்பவங்கள் அவற்றின் முக்கிய செயல்பாடுகளை பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன. முன்னணி தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள இந்த ஜப்பானிய தீயணைப்பு வாகனங்களின் திறனை மேம்படுத்தி, வணிகங்களை, தொழிலாளர்களை மற்றும் சமூகங்களை பாதுகாக்கும்.
இந்தத் திட்டம் இலங்கையின் சமூக-பொருளாதார சவால்களை தீர்க்கவும் நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கவும் ஜப்பானின் உறுதியான அர்ப்பணிப்பை முன்னிலைப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM