வாரியப்பொலவில் விமானப்படை விமானம் விபத்து : சிறப்பு விசாரணைக் குழு நியமனம் 

Published By: Digital Desk 3

21 Mar, 2025 | 11:31 AM
image

விபத்துக்குள்ளான விமானப்படையின் விமானம்  குறித்து விசாரிக்க விமானப்படைத் தளபதியினால்  சிறப்பு விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் உள்ள இலங்கை விமானப்படையின் இல  05  தாக்குதல் படைப்பிரிவிற்கு சொந்தமான   பயிற்சிக்காகப் பயன்படுத்தப்படும்  K-8 விமானம், இன்று வெள்ளிக்கிழமை (21) குருநாகல்  வாரியபொல  பகுதியில்   பயிற்சியின் போது விபத்துக்குள்ளானது. 

விமானத்தின் இரண்டு விமானிகளும் விமானத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேறி, குருநாகல் மினுவங்கேட் கல்லூரி வளாகத்தில் பாராசூட்களின் உதவியுடன் தரையிறங்கினர்.

இந்த விமானத்தில் தலைமை பயிற்சி பயிற்றுவிப்பாளர் விமானியும், பயிற்சி விமானி அதிகாரியும் இருந்தனர், மேலும் இந்த அதிகாரிகள் தற்போது  குருநாகல் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விமானம் கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இருந்து காலை 07.27 மணியளவில்  புறப்பட்டு, காலை 07.55 மணியளவில் விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தைத் தொடர்ந்து, விமானப்படைத் தளபதி எயார்  மார்ஷல் பந்து எதிரிசிங்க  விபத்து குறித்து விசாரிக்க ஏழு பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாத தடைச்சட்டம், நிகழ்நிலை காப்பு சட்டம்...

2025-04-30 17:52:20
news-image

எரிபொருள் விலைகளில் திருத்தம் !

2025-04-30 20:39:27
news-image

லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமில்லையாம் !

2025-04-30 20:27:40
news-image

இலங்கை - பாகிஸ்தான் இருதரப்பு பாதுகாப்பு...

2025-04-30 17:50:20
news-image

வாக்காளர் அட்டைகள் கடைகளில் மீட்பு ;...

2025-04-30 17:34:40
news-image

வெள்ளவத்தை பொதுச்சந்தை பகுதியில் தேசிய மக்கள்...

2025-04-30 18:06:00
news-image

கண்டி - கம்பளை பிரதான வீதியில்...

2025-04-30 17:28:22
news-image

முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் நீண்டகால பிரச்சினைகளை...

2025-04-30 17:38:11
news-image

தொழிற்சங்க நடவடிக்கை முன்னேடுக்க தயாராகும் தெல்லிப்பளை...

2025-04-30 17:13:54
news-image

டெங்கு நோயால் 6 பேர் உயிரிழப்பு 

2025-04-30 17:13:07
news-image

பாதுகாப்பு செயலாளர் - பாகிஸ்தான் இராணுவத்...

2025-04-30 17:01:17
news-image

மயிலத்தமடு விவசாயிகளின் பிரச்சினைக்கு நீதி கோரி...

2025-04-30 18:23:51