காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் உயிர்பிழைத்த 25 நாள் பெண்குழந்தையை மீட்பு பணியாளர்கள் இடிபாடுகளின் மத்தியிலிருந்து மீட்டுள்ளனர் என தெரிவித்துள்ள இன்டிபென்டன்ட் குழந்தையின் பெற்றோர் உயிரிழந்துவிட்டனர் என தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இன்டிபென்டன்ட் தெரிவித்துள்ளதாவது
கான்யூனிசின் வீடொன்றின் இடிபாடுகளில் இருந்து மீட்பு பணியாளர்கள் 25 நாள் பெண் குழந்தையை உயிருடன் மீட்டுள்ளனர் . பெற்றோர் இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்துவிட்டனர்.
இஸ்ரேலின் தாக்குதலால் தொடர்மாடியொன்று முற்றாக சிதைவடைந்துள்ள நிலையில் மீட்பு பணியாளர்களிற்கு நம்பிக்கை ஒளியொன்று தென்பட்டது,குழந்தையொன்றின் மிக மெல்லிய அழுகையே அது.
திடீரேன இடிபாடுகளின் மத்தியிலிருந்து மீட்புபணியாளர் ஒருவர் குழந்தையொன்றை தாலாட்டியவாறு வெளியே வந்த போது ஆண்டவனே பெரியவன் என்ற குரல் எழுந்தது.போர்வையால் போர்த்தப்பட்ட குழந்தையொன்றை காத்திருந்த அம்புலன்சிற்கு கொண்டு சென்றனர் , அங்கு துணை மருத்துவபிரிவினர் அதனை மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்தினர்.
அவர்களது வீட்டை தரைமட்டமாக்கிய இஸ்ரேலின் தாக்குதலால் அந்த கைக்குழந்தையின் பெற்றோரும் சகோதரனும் கொல்லப்பட்டனர்.
நாங்கள் அங்கு காணப்பட்ட மக்களை கேட்டவேளைஅந்த குழந்தை பிறந்து ஒரு மாதம் அதிகாலை முதல் அவள் இடிபாடுகளிற்குள்ளேயே இருந்தால் என அவர்கள் தெரிவித்தனர் என சிவில் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த ஹசென் அட்டர் தெரிவித்தார்.
அவள் அழுவாள் பிறகு மௌனமாகிவிடுவாள்,நாங்கள் அவளை மீட்கும் வரை இந்த நிலையே காணப்பட்டது ஆண்டவனிற்கு நன்றி என குழந்தை மீட்கப்பட்ட தருணங்களை அவர் வர்ணித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM