(எம்.மனோசித்ரா)
உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வியாழக்கிழமை (20) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது.
இதன் போது கொழும்பு மாநகரசபை, ஸ்ரீஜயவர்தனபுர கோட்டை, சீதாவாக்கை, தெஹிவளை - கல்கிசை மற்றும் மொரட்டுவை உள்ளிட்ட உள்ளூராட்சிமன்றங்களுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் பல நிராகரிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய கொழும்பு மாநகரசபைக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களில் 5 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், பொதுஜன ஐக்கிய முன்னணி, ஜனநாயக தேசிய கூட்டணியாக இரு அரசியல் கட்சிகளால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனு மற்றும் 3 சுயாதீன குழுக்களால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
மேலும், சீதாவாக்கை பிரதேச சபைக்கான ஐக்கிய தேசிய தேசிய கட்சியால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீஜயவர்தனபுர கோட்டை நகரசபைக்காக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனு, ஹோமாகம பிரதேசசபைக்காக சுயாதீன குழு சமர்ப்பித்த வேட்புமனு, தெஹிவளை - கல்கிசை மாநாகரசபைக்காக அகி இலங்கை மக்கள் காங்ரஸ் மற்றும் சுயாதீன குழுவொன்றால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இதனைத்தொடர்ந்து, மொரட்டுவை மாநாகரசபைக்காக சுயாதீன குழுவொன்றால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனு, கடுவலை நகரசபைக்காக சுயாதீன குழு மற்றும் இரண்டாம் பரப்பரை கட்சியால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள், மஹரகம நகரசபைக்காக பொதுஜன ஐக்கிய முன்னணி சமர்ப்பித்த வேட்புமனு, கெஸ்பேவ நகரசபைக்காக லங்கா மக்கள் கட்சி சமர்ப்பித்த வேட்புமனு, கொட்டிகாவத்த - முல்லேரியா பிரதேசசபைக்காக இரண்டாம் தலைமுறை சமர்ப்பித்த வேட்புமனு என்பன நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM