மன்னாரில் 38 வேட்பு மனுக்கள் தாக்கல் : 8 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு - தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்

21 Mar, 2025 | 09:56 AM
image

மன்னார் மாவட்டத்தில் 4 உள்ளூராட்சி சபைகளுக்கு 38 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அவற்றில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் உள்ளடங்களாக 8 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரும் , தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருமான  க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.

வியாழக்கிழமை (20) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு நான்கு சபைகளுக்கான வேட்பு மனுக்கள் கோரப்பட்டிருந்தது.

மன்னார் நகர சபை, நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு  பிரதேச சபைகள் உள்ளடங்களாக நான்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கு இவ்வாறு வேட்பு மனுக்கள் கோரப்பட்டிருந்தது.

கடந்த திங்கட்கிழமை (17) ஆம் திகதி தொடக்கம்  வியாழக்கிழமை (20) ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சுயேட்சை குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் உள்ளடங்களாக 45  பேர் கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தனர்.

அவற்றில் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் உள்ளடங்களாக 38 பேருடைய வேட்பு மனுக்கள் எமக்கு கிடைக்க பெற்றிருந்தது.

மன்னார் நகர சபையில் 09 கட்சிகளினதும், ஒரு சுயேட்சைக்குழு உள்ளடங்களாக 10 வேட்புமனுக்கள் கிடைக்கப்பெற்றது. முசலி பிரதேச சபைக்கு  09 கட்சிகளினதும், ஒரு சுயேட்சைக்குழு உள்ளடங்களாக 10 வேட்பு மனுக்கள் கிடைக்கப்பெற்றன.

நானாட்டான் பிரதேச சபைக்கு 07 கட்சியினதும் ஒரு சுயேட்சைக்குழு உள்ளடங்களாக 8 வேட்பு மனுக்கள் கிடைக்கப்பெற்றது. மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு 9 கட்சியினதும் ஒரு சுயேட்சைக்குழு உள்ளடங்களாக 10 வேட்பு மனுக்கள் கிடைக்கப்பெற்றன.

முசலி பிரதேச சபைக்கு கிடைக்கப்பெற்ற 10 வேட்பு மனுக்களில் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

நானாட்டான் பிரதேச சபைக்கு கிடைக்கப்பெற்ற 8 வேட்புமனுக்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு கிடைக்கப்பெற்ற 10 வேட்பு மனுக்களில் இலங்கை தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு, சிறிலங்கா தொழிலாளர் கட்சி,சர்வஜனம் அதிகாரம் ஆகிய நான்கு கட்சிகளினதும், சுயேட்சைக்குழு ஒன்று உள்ளடங்களாக 5 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

மன்னார் நகரசபைக்கு கிடைக்கப்பெற்ற 10 வேட்பு மனுக்களில் பொதுஜன ஐக்கிய முன்னணி, மற்றும் சுயேட்சைக்குழு உள்ளடங்களாக 2 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரும், தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருமான க.கனகேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

குறித்த ஊடக சந்திப்பில் மன்னார் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் கே.முகுந்தன் அவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மதுபான களியாட்டத்தில் தகராறு ; கூரிய...

2025-04-21 10:22:17
news-image

தமிழர்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பது...

2025-04-21 10:27:18
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த 167...

2025-04-21 09:57:23
news-image

பொலன்னறுவையில் கார் - மோட்டார் சைக்கிள்...

2025-04-21 09:39:54
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன்...

2025-04-21 09:02:07
news-image

இன்றைய வானிலை

2025-04-21 06:17:24
news-image

சாவகச்சேரியில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் இளைஞர்...

2025-04-21 02:33:37
news-image

யாழில் சங்கிலி அறுத்த குற்றச்சாட்டில் நால்வர்...

2025-04-21 02:14:25
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற போது...

2025-04-20 21:29:43
news-image

ஜனாதிபதிக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி...

2025-04-20 21:22:18
news-image

ஜனாதிபதி அநுரகுமார ட்ரம்ப்பை நேரடியாக சந்தித்து...

2025-04-20 21:25:53
news-image

உடுத்துறையில் வாள்வெட்டு தாக்குதல்; குடும்பஸ்தர் படுகாயம்!

2025-04-20 21:25:46