அர்ச்சுனா எம்.பி. குறித்த சபாநாயகரின் தீர்மானம் இனரீதியானதல்ல - அமைச்சர் உபாலி பன்னிலகே

Published By: Digital Desk 2

20 Mar, 2025 | 07:57 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தொடர்பில் சபாநாயகர் எடுத்த தீர்மானத்தை இன ரீதியாக பார்ப்பது முற்றிலும் தவறானது. தீவிரமான  பரிசீலனைக்கு அமைவாகவே சபாநாயகர் குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளார். இதற்கும், அரசாங்கத்துக்கும் எவ்வித தொடர்பும் கிடையாதென கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

இந்த பாராளுமன்றத்தில் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்,  ஆர்.சம்பந்தன் ஆகிய சிரேஷ்ட அரசியல்  தலைவர்கள் இருந்துள்ளார்கள். எதிர்க்கட்சித் தலைவர்களாகவும் பதவி வகித்துள்ளார்கள். தேசிய ரீதியான பிரச்சினைகள் தோற்றம்  பெறும் போது நடுநிலையாக இருந்தும் செயற்பட்டுள்ளார்கள். ஆகவே அவர்கள் மீது எமக்கு சிறந்த கௌரவம் உள்ளது.

பாராளுமன்றத்தில் தற்போது அங்கம் வகிக்கும் தமிழ் மற்றும் முஸ்லிம்  சக  பிரதிநிதிகளிடம் இணக்கமாகவே செயற்படுகிறோம். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் செயற்பாடுகள் தொடர்பில்  சபாநாயகர் அண்மையில் விசேட அறிவிப்பை சபையில் விடுத்திருந்தார். இவ்விடயம் தொடர்பில் எமது சிரேஷ்ட  சக உறுப்பினராக  எஸ். சிறிதரன் பல விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

எமது சக  பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மீது எமக்கு அதீத கௌரவம் உள்ளது. ஆகவே இந்த  விடயத்தை இனரீதியாக பார்க்க வேண்டாம் என்று தயவுடன் கேட்டுக் கொள்கிறோம். யார் தவறிழைத்தாலும் அதற்கான பிரதிபலனை பெற வேண்டும்.

குறித்த பாராளுமன்ற உறுப்பினர் தொடர்பில் சபாநாயகர்  தீவிரமாக ஆராய்ந்து, அவரது வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மற்றும் தத்துவங்களுக்கு அமைவாகவே  தீர்மானம் எடுத்துள்ளார்.இந்த விடயத்தில் அரசாங்கம் தலையிடவில்லை. தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் விசேட  கவனம் செலுத்தியுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில். 500 கிலோ மஞ்சளுடன் ஒருவர்...

2025-04-30 02:57:51
news-image

மட்டக்களப்பில் படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் மாமனிதர்...

2025-04-30 01:48:14
news-image

மே தினத்தன்று பிரதான அரசியல் கட்சிகள்...

2025-04-29 21:29:39
news-image

குழந்தைகளின் மரணங்கள் குறித்த பிரேத பரிசோதனை...

2025-04-29 17:31:04
news-image

மின்சார செலவுகள் மற்றும் விலை நிர்ணயம்...

2025-04-30 02:54:21
news-image

ரணிலின் சமூக வலைத்தளங்களிலிருந்தே ஜனாதிபதி தகவல்களைப்...

2025-04-29 17:24:41
news-image

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு...

2025-04-29 19:00:38
news-image

வடக்கு கரையோர பிரதேசங்களில்  போதைப்பொருள் பாவனை...

2025-04-29 21:18:09
news-image

கொழும்பை சுத்தமான நவீன நகரமாக மாற்றுவோம்...

2025-04-29 21:24:23
news-image

கடந்த தேர்தல்களில் அசெளகரியங்கள் ஏற்பட்டிருந்தால் அவற்றை...

2025-04-29 17:33:26
news-image

வில்பத்து தேசிய பூங்காவில் ஆமைகளை பிடிக்க...

2025-04-29 17:16:00
news-image

சந்தேகத்தின் கைதுசெய்ய நபரை ஈவிரக்கமின்றி தாக்கிய...

2025-04-29 17:27:56