(எம்.மனோசித்ரா)
ஐக்கிய தேசிய கட்சி கொழும்பு மாவட்டத்தில் 13 உள்ளூராட்சி மன்றங்களிலும் யானை சின்னத்தில் களமிறங்கவுள்ளது. அடுத்த வாரம் செயற்குழு கூட்டத்தின்போதே கொழும்பு மாநாகர சபை உள்ளிட்ட ஏனைய மாநாகர சபைகளுக்கான மேயர் வேட்பாளர்கள் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
கொழும்பு மாவட்ட செயலகத்தில் வியாழக்கிழமை (20) வேட்புமனு தாக்கலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஐக்கிய தேசிய கட்சி கொழும்பு மாவட்டத்தில் 13 உள்ளூராட்சி மன்றங்களிலும் யானை சின்னத்தில் களமிறங்கவுள்ளது. ஏனைய மாவட்டங்களிலும் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருக்கின்றோம். இந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியை மாத்திரமின்றி ஏனைய பல்வேறு கட்சிகளையும் இணைத்துக் கொண்டு களமிறங்குவதற்கு முயற்சித்தோம்.
எவ்வாறிருப்பினும் அந்த முயற்சி தோல்வியடைந்தமையால் யானை சின்னத்தில் களத்தில் இறங்கியுள்ளோம். மக்களுக்கு சேவையாற்றிய பலம் மிக்க குழுக்களையே நாம் களமிறக்கியுள்ளோம். அதற்கமைய இம்முறை சிறந்த வெற்றியைப் பெற முடியும் என்று நம்புகின்றோம்.
வேட்புமனுக்களுக்கு செயற்குழுவின் அங்கீகாரத்தைப் பெறுவதே ஐக்கிய தேசிய கட்சியின் சம்பிரதாயமாகும். அதேபோன்று தான் குழுக்களின் தலைவர்கள், மேயர் வேட்பாளர்களும் நியமிக்கப்படுவர். அடுத்த வாரம் ஐ.தே.க. செயற்குழு கூடி இவை தொடர்பான தீர்மானங்களையும் எடுக்கும். அதற்கமைய உரிய நேரத்தில் இந்த தீர்மானங்கள் தொடர்பில் அறிவிப்போம்.
ரோசி சேனாநாயக்க தேசிய மட்ட அரசியலில் ஈடுபட்டு வருவதால் அவரை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் களமிறக்குவதற்கு எதிர்பார்க்கவில்லை. எவ்வாறிருப்பினும் அவர் கொழும்பு மாவட்ட தேர்தல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM