காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் மின்சார விநியோகத்தை துண்டித்ததமைக்கு சவுதி அரேபியா கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தை மீண்டும் மீறியுள்ளதை இஸ்ரேல் நிரூபிப்பதாக தெரிவித்துள்ளது.
காசாவுக்கு எந்த நிபந்தணைகளும் இன்றி மின்சாரத்தை வழமைக்கு கொண்டு வர அவசர நடவடிக்கைகளை எடுக்குமாறு சர்வதேச சமூகத்திற்கு ஐக்கிய அரபு இராச்சியம் அழைப்பு விடுத்துள்ளது.
இதேவேளை, இந்த மனித உரிமை மீறல்களுக்கு இஸ்ரேல் சர்வதேச பொறுப்பு கூறல் வழிமுறைகளை செயல்படுத்துவதற்கும் அழைப்பு விடுத்துள்ளது.
காசாவுக்கான அரபு இஸ்லாமிய கூட்டிணைவு விசேட மாநாட்டில் நியமிக்கப்பட்ட அமைச்சரவை குழுவின் அறிக்கையில்,
காசா பகுதியில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளால் ஆரம்பிக்கப்பட்ட தாக்குதல்களில் நிராயுதபாணிகளான பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் நேரடி குண்டுவீச்சு தாக்குதலுக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல்கள் காசா பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாகவும், ஐ.நா. தீர்மானங்கள், சர்வதேச சாசனங்கள், ஒப்பந்தங்கள் மற்றும் சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீறுவதாகவும் உள்ளது.
பிராந்தியத்தில் பதட்டங்களைத் தணிக்க மற்றும் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை அடைவதற்கான முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.
ஐ.நா. தீர்மானங்கள், சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு இணங்க, இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுக்க உடனடியாக தலையிடவும், அதன் தார்மீக மற்றும் சட்டப் பொறுப்புகளை ஏற்கவும், உடனடியாக இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கவும், சர்வதேச சமூகத்திற்கு அமைச்சரவை குழு தனது கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்துகிறது.
முன்னொருபோதும் இல்லாத மனிதாபிமான பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ள காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து விரிவடைவதை உறுதிசெய்ய வேண்டும்.
இது சம்பந்தமாக, காசாவில் நிலையான போர்நிறுத்தம், இஸ்ரேலிய விரிவாக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருதல், பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பித்தல் மற்றும் காசாவில் போர் நிறுத்த உடன்படிக்கையின் அனைத்து நிலைகளையும் செயல்படுத்துவதற்கான போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் ஆகியவற்றின் அவசரத் தேவையை அமைச்சர் குழு உறுதிப்படுத்துகிறது,
ஐ.நா. தீர்மானங்கள், சர்வதேச சட்டம் மற்றும் ஒப்புக்கொள்ளப்பட்ட நிபந்தனைகளின்படி, இரு நாடுகளின் தீர்வு மற்றும் அரபு அமைதி முன்முயற்சி ஆகியவற்றின் கட்டமைப்பிற்குள் பாலஸ்தீனிய காரணத்திற்காக நியாயமான மற்றும் நிலையான அமைதியை அடைவதன் முக்கியத்துவம் குறித்து அமைச்சர் குழு தனது உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது.
2023 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த குழுவில் சவுதி அரேபியா, ஜோர்தான் ஹாஷிமைட் இராச்சியம், எகிப்து அரபுக் குடியரசு, கத்தார், பஹ்ரைன், துருக்கி, இந்தோனேசியா , நைஜீரியா, லீக் பொதுச் செயலர் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் அங்கம் வகிக்கின்றனர். இது ஒரு இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM