வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தனது முதலமைச்சருக்குரிய கடமையை உரியமுறையில் நிறைவேற்றவில்லை. எனவே தமிழ் தேசியக்கூட்டமைப்பு அவரை நீக்கிவிட்டு புதிய ஒருவரை முதலமைச்சராக நியமிப்பதே சாலப்பொருத்தமாக அமையும். மக்களுக்கு சேவையாற்றுவதற்கு பதிலாக சி.வி. விக்னேஸ்வரன் இனவாத செயற்பாட்டையே கடந்த காலம் முழுவதும் முன்னெடுத்துள்ளார் என்று சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார்.
நீதிபதிஇ நீதியரசர் என்றவகையில் தான் பயன்படுத்திய திறமையையும் மக்களிடம் காட்டிய செவிமடுத்தலையும் விக்கினேஸ்வரன் முதலமைச்சர் பதவியில் வெளிக்காட்டவில்லை. எனவே அவர் அந்தப்பதவிக்கு பொருத்தமானவர் அல்ல என்றும் டிலான் பெரேரா சுட்டிக்காட்டினார்.
வடமாகாண சபையில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் கேசரிக்கு விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,
தெற்கில் கூட்டு எதிரணியினர் மற்றும் உதய கம்மன்பில, தினேஷ் குணவர்த்தன போன்றோர் இனவாத செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். அவர்களுக்கு சற்றும் குறையாத வகையில் வடக்கில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் சிவாஜிலிங்கம் உள்ளிட்டோர் இனவாத செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக தமிழ் தேசியக்கூட்டமைப்பு அறிவித்தபோது இந்த நாட்டின் மிதவாத தலைவர்கள் அனைவரும் அவரை வரவேற்றனர். அவர் ஒரு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவார் என்றும் சம்பந்த னுக்குப் பின்னர் கூட்டமைப்பின் தலை மைப் பொறுப்பை ஏற்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் விக்னேஸ்வரன் முதலமைச்சர் ஆகிய பின்னர் இனவாதத்தை கையில் எடுத்தார். அதுமட்டுமன்றி வடக்கு மக்களுக்காக எதனையும் செய்யவில்லை. வடமாகாணசபைக்கு ஒதுக்கப்பட்ட நிதி முழுவதுமாக செலவிடப்படாத நிலைமை காணப்பட்டது.
தெற்கின் இனவாதத்திற்கு தீனிபோடும் செயற்பாடுகளையே விக்னேஸ்வரன் முன்னெடுத்தார். எனவே என்னைப் பொறுத்தவரையில் விக்னேஸ்வரனை நீக்கிவிட்டு நன்றாக பணியாற்றக்கூடிய ஒருவரை முதலமைச்சராக நியமிப்பது சரியான தெரிவாக இருக்கும். இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்யலாம்.
நாங்கள் மாகாண சபைகளுக்கு காணி, மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் கூட வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றோம். அவ்வாறு நாங்கள் செயற்படும்போது மறுபுறம் இந்த செயற்பாட்டில் வடமாகாணசபை வெற்றிபெறவில்லை. மக்களுக்குரிய தேவைகளை நிறை வேற்றுவதில் வடமாகாணசபை அடைந்துள்ள மட்டம் திருப்திகரமானதாக இல்லை.
வருடத்திற்காக ஒதுக்கப்பட்ட முழுமையான நிதியைக்கூட அவர்கள் செலவழிக்கவில்லை. அப்படியாயின் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்பதே அர்த்தமாகும். அதனால் என்னுடைய நிலைப்பாடானது வடக்கு முதலமைச்சராக செயற்றிறனுடன் பணியாற்றும் ஒருவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நியமிக்கவேண்டும் என்பதாகும்.
மேலும் தற்போது புதிய அரசியலமை ப்பை உருவாக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம். அதில் முக்கிய ஒரு விடயம் உள்ளடக்கப்படவேண்டுமென நான் கருதுகிறேன். அதாவது இனவாத செயற்பாடுகளுக்கு எதிராக அரசியலமை ப்பின் ஊடாகவே சில ஏற்பாடுகளை முன்வைக்க வேண்டுமென நான் வலியுறுத்துகின்றேன்.
அதனூடாகவே இந்த நாட்டின் இனவாதத்தை தடுக்க முடியும். தெற்கில் சிங்கங்களும் வடக்கில் புலிகளும் மட்டுமே வாழவேண்டும் என நினைப்பது தவறாகும். அனைத்துப் பிரதேசங்களிலும் மக்கள் வாழவேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள். நாங்கள் அந்த மக்களுக்காகவே குரல்கொடுக்கின்றோம்.
கேள்வி: நீங்கள் விக்னேஸ்வரன் பதவிவிலக வேண்டும் என கூறுகின்றீர்கள். ஆனால் அவரை ஆதரித்து இன்று (நேற்று) ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனரே இது எதனை வெளிக்காட்டுகிறது?
பதில்: இதற்கு நான் ஒரு சிறந்த பதிலை கூறமுடியும். கடந்த மூன்று வருடகாலத் தில் மக்களுக்காக எதனையும் செய்யாத விக்னேஸ்வரனுக்காக மக்கள் வெள்ளம் நிறைகிறது என்றால் அவர் அந்தளவிற்கு இனவாதத்தைப் பரப்பியுள்ளார் என்பது தெளிவாகின்றது. அதனை நீங்கள் தெற்கிலும் காணலாம்.
தெற்கில் முன்னாள் ஜனாதிபதி இனவாதத்தை முன்னெடுப்பதால்தான் அவருடைய கூட்டங்களுக்கு இலட்சக்கணக்கான மக்கள் வருகின்றனர். இலட்சக்கணக்கான மக்கள் வந்துவிட்டனர் என்பதற்காக அந்த தலைவர் இனவாதமற்ற சிறந்த தலைவராகிவிட முடியாது.
நான் இன்று அதிகாரப்பகிர்விற்காக குரல்கொடுக்கின்றேன். எனது நிலைப்பாட்டை மாற்றி நாளையே நான் இனவாதியாக மாறினால் என்னாலும் இலட்சக்கணக்கான மக்களை அணிதிரட்ட முடியும். ஆனால் அரசியல் என்பது அதுவல்ல. கொள்கை ரீதியில் இனவாதத்தைப் பரப்பாது மக்களுக்கு சேவையாற்றவேண்டும்.
கேள்வி: வடக்கு முதல்வரின் செயற்றிறனில் எந்தக்குறையைக் கண்டீர்கள்?
பதில்: வடமாகாண சபைக்காக ஒதுக்கப் பட்ட நிதியையே அவர் முழுமையாக பயன் படுத்தவில்லை. அமைச்சர் சுவாமிநாதன் வடக்கில் முன்னெடுத்த வீட்டுத்திட்டத்தி ற்கு எதிராக நின்றவர். ஒரு தமிழ் அமைச் சருடன் பேச்சுவார்த்தை நடத்தி வடக்கு முதலமைச்சரால் ஒரு திட்டத்தை முன்னெ டுக்க முடியவில்லையாயின் அவர் எவ் வாறு மக்களுடன் சேவையாற்றுவார் என் பதை எம்மால் புரிந்துகொள்ள முடியும். என்னைப் பொறுத்தவரையில் இனவாத த்தை தவிர வடக்கு முதல்வர் வேறு ஒன் றையும் செய்ததாக தெரியவில்லை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM