தேசபந்து தென்னக்கோனின் பிணை மனு மீதான தீர்மானம் இன்று !

20 Mar, 2025 | 09:09 AM
image

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள்  பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், இன்று வியாழக்கிழமை  (20) மீண்டும் மாத்தறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

தேசபந்து தென்னக்கோனின் பிணை மனு மீதான முடிவு இன்று பிற்பகல் 2.00 மணிக்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம் அறிவிக்க உள்ளது.

2023 ஆம் ஆண்டு வெலிகம பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்ட  தேசபந்து தென்னக்கோன், 20 நாட்கள் தலைமறைவாக இருந்த நிலையில், புதன்கிழமை (19) நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தார்.

இதன்பின்னர் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை புதன்கிழமை (19) மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை வியாழக்கிழமை (20) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவரை விசேட  பாதுகாப்பின்  கீழ் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மதுபான களியாட்டத்தில் தகராறு ; கூரிய...

2025-04-21 10:22:17
news-image

தமிழர்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பது...

2025-04-21 10:27:18
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த 167...

2025-04-21 09:57:23
news-image

பொலன்னறுவையில் கார் - மோட்டார் சைக்கிள்...

2025-04-21 09:39:54
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன்...

2025-04-21 09:02:07
news-image

இன்றைய வானிலை

2025-04-21 06:17:24
news-image

சாவகச்சேரியில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் இளைஞர்...

2025-04-21 02:33:37
news-image

யாழில் சங்கிலி அறுத்த குற்றச்சாட்டில் நால்வர்...

2025-04-21 02:14:25
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற போது...

2025-04-20 21:29:43
news-image

ஜனாதிபதிக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி...

2025-04-20 21:22:18
news-image

ஜனாதிபதி அநுரகுமார ட்ரம்ப்பை நேரடியாக சந்தித்து...

2025-04-20 21:25:53
news-image

உடுத்துறையில் வாள்வெட்டு தாக்குதல்; குடும்பஸ்தர் படுகாயம்!

2025-04-20 21:25:46