இளைஞர்களுக்கு சந்தர்ப்பமளிக்கவே இம்தியாஸ் பதவி விலகினார் : ரில்வினை போன்று பதவியை அணைத்துக் கொண்டிருக்கவில்லை - நளின் பண்டார

19 Mar, 2025 | 09:49 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

இளைஞர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கே எமது கட்சியின் தவிசாளர் பதவி விலகினார். மாறாக மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா போன்று பதவியை தொடர்ந்து அணைத்துக்கொண்டிருப்பதில்லை. புதியவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவோம் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) இடம்பெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தின்  வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிக்கொண்டிருக்கையில் ஆளும் தரப்பு உறுப்பினர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு  தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவி விலகியுள்ளார். எமது கட்சியில் இருக்கும் இளைஞர்களுக்கும் புதியவர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கவே பதவி விலகியுள்ளார். அதுதான் எமது கட்சியில் இருக்கும் சிரேஷ்ட உறுப்பினர்களின் முன்மாதிரி நடவடிக்கை. 

ஆனால், மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா போன்று எமது கட்சியில் யாரும் தொடர்ந்து அந்த பதவிகளை அனைத்துக்கொண்டிருப்பதில்லை. 

அத்துடன் இடம்பெற இருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 300 உள்ளூராட்சி மன்றங்களில் 100 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றுவதுடன் அதன் தலைவர்களாகவும் நியமிக்கப்படுவார்கள் என்பதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.

கிராம மக்கள் கிராமத்தில் வேலை செய்ய முடியுமான, கிராம மக்களின் கவலை, கஷ்டம் தொடர்பில் தெரிந்த வேட்பாளர்களையே தெரிவு செய்வார்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாத தடைச்சட்டம், நிகழ்நிலை காப்பு சட்டம்...

2025-04-30 17:52:20
news-image

எரிபொருள் விலைகளில் திருத்தம் !

2025-04-30 20:39:27
news-image

லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமில்லையாம் !

2025-04-30 20:27:40
news-image

இலங்கை - பாகிஸ்தான் இருதரப்பு பாதுகாப்பு...

2025-04-30 17:50:20
news-image

வாக்காளர் அட்டைகள் கடைகளில் மீட்பு ;...

2025-04-30 17:34:40
news-image

வெள்ளவத்தை பொதுச்சந்தை பகுதியில் தேசிய மக்கள்...

2025-04-30 18:06:00
news-image

கண்டி - கம்பளை பிரதான வீதியில்...

2025-04-30 17:28:22
news-image

முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் நீண்டகால பிரச்சினைகளை...

2025-04-30 17:38:11
news-image

தொழிற்சங்க நடவடிக்கை முன்னேடுக்க தயாராகும் தெல்லிப்பளை...

2025-04-30 17:13:54
news-image

டெங்கு நோயால் 6 பேர் உயிரிழப்பு 

2025-04-30 17:13:07
news-image

பாதுகாப்பு செயலாளர் - பாகிஸ்தான் இராணுவத்...

2025-04-30 17:01:17
news-image

மயிலத்தமடு விவசாயிகளின் பிரச்சினைக்கு நீதி கோரி...

2025-04-30 18:23:51