கடந்த மாசி மாதம் 20 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் 2 படகுகளுடன் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 6 பேரினது வழக்கு இன்று புதன்கிழமை (19) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் நீதவான் நளினி சுபாஸ்கரன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இம்மாதம் 5 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இன்றையதினம் வரை இவர்களை விளக்கமறையில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
இன்றைய தினம் சிறைச்சாலை அதிகாரிகளால் 6 மீனவர்களும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். வழக்கினை ஆராய்ந்த நீதவான் 6 பேரில் 4 பேருக்கு ஆறு வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறை தண்டனை வழங்கி நிபந்தனையுடன் விடுதலை செய்தார்.
இந்த 6 பேரில் இருவர் படகோட்டிகள் என்பதால் அவர்களுக்கு ஆறுமாத கடூழிய சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிடப்பட்டிருந்தது. அத்துடன் படகோட்டிகள் இருவருக்கும் தலா நான்கு மில்லியன் ரூபா அபராத தொகையும் விதிக்கப்பட்டது இதனை செலுத்த தவறின் மேலும் 3 மாத சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதவான் நளினி சுபாஸ்கரன் உத்தரவிட்டிருந்தார்.
கடந்த மாதம் 20 ஆம் திகதி நெடுந்தீவு கடலில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வேளை இலு படகுகளுடன் கடற் படையினர் இவர்களை கைது செய்திருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM