உலகத்தில் ஐம்பது சதவீதத்திலிருந்து அறுபது சதவீத மக்கள் வாழ்வில் ஒரு முறையேனும் 'பைல்ஸ்' என மருத்துவ மொழியில் குறிப்பிடப்படும் மூல வியாதி பாதிப்புக்கு ஆளாகுவதாகவும் இதில் பெரும்பான்மையானவர்கள் சிகிச்சைக்குப் பிறகு முழுமையான நிவாரணத்தை பெறுவதாகவும் ஆய்வுகள் மூலம் கண்டறிப்பட்டிருக்கிறது. இந்நிலையில் மூல வியாதிக்கு லேசர் முறையில் நவீன சிகிச்சை அறிமுகமாகி நல்ல பலனை அளித்து வருவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
மூல நோய் என்பது மிகவும் பொதுவான தீங்கற்ற அனுரெக்டல் நோயாகும். உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்களை இது பாதிக்கிறது.
மலத்தை வெளியேற்றும்போது கடுமையான அசெகரியத்தை உணர்வது, வலி, குருதியுடன் கூடிய மலம் வெளியேறுவது போன்ற அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு பைல்ஸ், ஃபிஸ்டுலா, அனல் ஃபிஷர் என மருத்துவ மொழியில் குறிப்பிடப்படும் பாதிப்புகள் இருக்கக்கூடும். மல குடலில் இருக்கும் மல்தை வெளியேற்றும் திசுக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறது என்றும் அந்த திசுக்கள் சேதமடைந்திருக்கிறது என்றும் புரிந்து கொள்ளலாம்.
இதற்கு மருத்துவர்கள் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனையை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்து நவீன பாணியிலான மேம்படுத்தப்பட்ட மருத்துவ தொழில்நுட்பங்களுடன் அறிமுகமாகி இருக்கும் லேசர் சத்திர சிகிச்சை மூலம் நிவாரணம் தருவர்.
இத்தகைய சிகிச்சையை மேற்கொள்ளும்போது தழும்புஏற்படுவதில்லை. விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பலாம். குறைவான இரத்த இழப்பு, வலி குறைவு, தொற்று பாதிப்புகளும் குறைவு...என பல சாதகமான அம்சங்கள் இருப்பதால் தற்போது இத்தகைய பாதிப்புகளுக்கு லேசர் சிகிச்சை சிறந்த நிவாரணத்தை வழங்கி வருகிறது.
வைத்தியர் பாரி முத்துக்குமார்
தொகுப்பு அனுஷா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM