(எம்.மனோசித்ரா)
பட்டலந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கையை அரசாங்கம் தீர்மானிக்கப் போவதில்லை. மாறாக சட்ட அமுலாக்க நிறுவனங்களே அதனைத் தீர்மானிக்கும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து பாராளுமன்றத்தில் தெளிவாகத் தெரிவித்திருக்கின்றோம். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அந்த அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்று அல் ஜசீரா நேர்காணலில் தெரிவித்திருந்தார்.எனவே, அது செல்லுபடியாகாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
எனவே தான் மும்மொழிகளிலும் அந்த அறிக்கையை நாம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கின்றோம். பட்டலந்த வீடமைப்பு திட்டம், சட்ட விரோதமாக தடுத்து வைத்தல் பிரதேசம் மற்றும் வதை முகாம் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையிலுள்ள காரணிகள் தொடர்பில் மேலும் ஆழமாக மதிப்பாய்வு செய்து பரிந்துரைகளை வழங்குவதற்காக குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. மேலும் இவ்வறிக்கை சட்டமா அதிபருக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது. ஜனாதிபதியால் நியமிக்கப்படவுள்ள குழுவின் பரிந்துரைகள் மற்றும் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
எனவே, பட்டலந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கையை அரசாங்கம் தீர்மானிக்கப் போவதில்லை. மாறாக சட்ட அமுலாகக்க நிறுவனங்களே அதனைத் தீர்மானிக்கும்” என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM