(எம்.மனோசித்ரா)
அரச சேவையில் நிலவும் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியம் எந்த வகையிலும் கட்டுப்பாடு விதிக்கவில்லை. அந்த வகையில் அரச சேவையில் நிலவும் 15,921 வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்ள நிதி அமைச்சின் முகாமைத்துவ திணைக்களத்தின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்ற போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
"அரச சேவையில் ஆட்சேர்ப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படக் கூடாதென்றும் சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டமை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கற்பனை கதையாகும். நாமும் அதே நாணய நிதியத்துடனேயே செயற்பட்டு வருகின்றோம். அவ்வாறு எந்தவொரு நிபந்தனையும் விதிக்கப்படவில்லை.
அரச சேவையில் நிலவும் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்ள நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். அதில் எவ்வித பிரச்சினையும் இல்லை. அரச செலவுகளைக் குறைத்து, அரச நிதியை முகாமைத்துவம் செய்ய வேண்டும் என்பதே நாணய நிதியத்தின் நிபந்தனையாகும்.
அரச சேவையில் வெற்றிடங்களை நிரப்புவதற்கு வழிமுறையொன்றின் ஊடாக செயற்பட்டு வருகின்றோம். கடந்த அரசாங்கத்தைப் போன்று அரசியல் இலாபத்துக்காக இதனை நாம் செயற்படுத்தவில்லை. பிரதமரின் செயலாளர் தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சின் முகாமைத்துவ திணைக்களத்தின் அனுமதியுடன் வெற்றிடங்களுக்கான நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக இரு கட்டங்களாக அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய முதல் கட்டத்தில் 10 அமைச்சுக்களில் நிலவும் 7,456 வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்புக்களுக்கு அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது. அதன் பின்னர் கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 5,882 வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய சுகாதார சேவையில் தாதியர்கள் உட்பட அரச சேவையில் 15,921 ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்ள அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த நியமனங்களை வழங்குவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை. அதேபோன்று பட்டதாரிகளுக்கும் போட்டிப்பரீட்சை நடத்தப்பட்டு அவர்களுக்கும் உரிய வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படும்" என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM