அநுராதபுரம், மின்னேரியா, மினிஹிரிகம பிரதேசத்தில் காட்டு யானை ஒன்று கடை ஒன்றின் சுவரை இடித்து சேதப்படுத்தியதில் கடைக்குள் உறங்கிக்கொண்டிருந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (18) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
மினிஹிரிகம பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தன்று, காட்டு யானை ஒன்று குறித்த கடையின் சுவரை இடித்துள்ளது.
இதன்போது, கடையின் சுவர் இடிந்து அங்கு உறங்கிக்கொண்டிருந்த பெண்ணின் மீது விழுந்துள்ளது.
காயமடைந்த பெண் ஹிங்குரக்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM