யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுன்னாகம் கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, மோட்டார் சைக்கிளில் பின்னால் சென்ற மற்றைய நபர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுன்னாகம் கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக, தெல்லிப்பழையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற ஒரு மோட்டார் சைக்கிள் மீது அதே திசையில் சென்ற இன்னொரு மோட்டார் சைக்கிள் மோதியது.
இந்த விபத்தில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே படுகாயமடைந்துள்ள நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM