கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி உறவுமுறை சகோதரர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 8 பேர் கைது

Published By: Vishnu

17 Mar, 2025 | 09:38 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி உறவுமுறை சகோதரர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை அதிகாலை கிரான்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெஹெரகொடெல்ல பகுதியில் 21 மற்றும் 22 வயதுடைய உறவுமுறை சகோதரர்கள் இருவர் கொல்லப்பட்டிருந்தனர். முச்சக்கரவண்டியொன்று தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக நவலோகபுர சேதவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த இளைஞர்கள் இருவரும் கிரான்பாட்ஸ் வெஹெரகொடெல்ல பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் இருவர் மீது தாக்குதல் மேற்கொள்வதற்காக மற்றுமொரு தரப்பினருடன் இணைந்து சென்றிருந்த போது ஏற்பட்ட முரண்பாட்டினால் இந்தக்கொலைச்சம்பவம் பதிவாகியிருந்தது.

இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் இந்த இரட்டைக்கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

16 முதல் 44 வயதுடைகளுடைவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாகக்கூறப்படும் 2 கத்திகள் மற்றும் கைத்தொலைபேசிகள் என்பனவும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கிரான்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜஹ்ரான் ஹாசிமிற்கும் இராணுவபுலனாய்வுபிரிவிற்கும் இடையிலான தொடர்புகள்...

2025-04-21 14:05:35
news-image

சாரதியை கத்தி முனையில் மிரட்டி காரை...

2025-04-21 13:49:18
news-image

வெல்லம்பிட்டியில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-04-21 12:40:16
news-image

வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையின் அதிபராக...

2025-04-21 14:09:57
news-image

கொத்தட்டுவ பகுதியில் ஹெரோயினுடன் ஒருவர் கைது...

2025-04-21 13:01:10
news-image

கஞ்சா செடிகளுடன் வைத்தியசாலை விடுதியின் உரிமையாளர்...

2025-04-21 13:12:03
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; வேட்புமனுக்கள்...

2025-04-21 13:02:16
news-image

மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தையும் தாயும்...

2025-04-21 12:19:26
news-image

மின்னல் தாக்கி நான்கு பிள்ளைகளின் தாய்...

2025-04-21 11:53:04
news-image

யாழ். மரியன்னை பேராலயத்தில் உயிர்த்த ஞாயிறு...

2025-04-21 12:27:15
news-image

ஹொரவபொத்தானையில் வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞன் கைது...

2025-04-21 14:07:33
news-image

பண்டாரவளை- பூனாகலை பிரதான வீதியில் மண்சரிவு!

2025-04-21 12:28:06