வெப்ப அலையை எதிர்கொள்வது எப்படி?

Published By: Digital Desk 2

17 Mar, 2025 | 04:49 PM
image

உலகம் முழுவதும் புவி வெப்பமயமாதல் காரணமாக பருவ நிலையில் சமச் சீரற்ற நிலை ஏற்படுகிறது. கோடை காலம் என்றால் அதிக வெப்பமும் மழைக்காலம் என்றால் அதீத மழை பொழிவும் பனிக்காலம் என்றால் உறை பனியாகவும் மாறி மக்களை ஆரோக்கிய ரீதியாக கடும் பாதிப்புக்குள்ளாக்குகிறது. இந்தத் தருணத்தில் கோடை காலத்தில் உண்டாகும் வெப்ப அலையை எதிர்கொள்வது குறித்து வைத்திய நிபுணர்கள் பின்வருமாறு விவரிக்கிறார்கள்.

கோடை காலம் வந்துவிட்டால் எம்முடைய வீடு, அலுவலகம், விற்பனை நிலையம், தொழிற்சாலை, என அனைத்து பகுதிகளிலும் குளிர்சாதன வசதியை ஏற்படுத்திக் கொண்டு வெப்ப அலையிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்வர். இந்நிலையில் எம்முடைய வீடுகளில் உள்ள குளிர்சாதன கருவியை கோடை காலத்தில் அதிகமாகவும், ஏனைய பருவ நிலைகளில் மிகக் குறைவாகவும் பாவிக்கும் பழக்கம் உண்டு.

இதன் காரணமாக குளிர்சாதன கருவியை கோடை காலத்தில் இயக்குவதற்கு முன் அதனை முழுமையாக சுத்திகரிக்க வேண்டும். அதன் பிறகு பாவிக்க வேண்டும் என வைத்தியர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஏனெனில் பயன்பாட்டில் குறைவான நிலையில் இருக்கும் குளிர்சாதன கருவியை திடீரென்று கோடை காலத்தில் இயக்கும்போது அதில் உள்ள தூசுகள், பாக்டீரியாக்கள், பூஞ்சை காளான்கள் போன்றவை குளிர்சாதன கருதியின் மூலம் வெளியாகும் காற்றின் வழியாக வெளியேறி எம்முடைய சுவாச பாதையை பாதிக்கும். அத்துடன் சளி, இருமல், மூச்சு திணறல் போன்ற பாதிப்புகளையும் உண்டாக்கும்.

வெயில் காலத்தில் வெளியில் சென்று வீட்டிற்கு வந்தவுடன் வெப்பம் தாங்காமல் குளிர்சாதன கருவியை இயக்கி, அதன் முன் நின்று கொண்டு அதிலிருந்து வீசும் சில்லென்ற காற்றை சுவாசிப்பர்.

இந்த முறை ஆரோக்கியமற்றது என்று வைத்தியர்கள் விவரிக்கிறார்கள். ஏனெனில் எம்முடைய உடல்நிலை 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை சமச்சீராக பராமரிக்கின்றது. மேலும் 23 டிகிரி முதல் 39 டிகிரி வரையிலான வெப்பத்தை மட்டுமே எதிர்கொள்ளக்கூடிய திறனை பெற்றிருக்கிறோம்.

கோடை காலத்தின் போது வெயிலின் அளவு 39 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும். இந்த தருணத்தில் வெயிலில் சென்று விட்டு மீண்டும் வீட்டுக்குள் வரும்போது குளிர்சாதன கருவியை 18 என்ற எண்ணிக்கைக்கு கீழ் குளிர் நிலைக்கு வைத்து அறையை குளிர் மிக்கதாக ஆக்கி வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்வர்.

இதனால் உடலின் வெப்ப நிலையில் சம சீரற்ற தன்மையை ஏற்பட்டு காய்ச்சல் , கை கால் நடுக்கம் உள்ளிட்ட சுகவீனங்கள் ஏற்படக்கூடும் என வைத்தியர்கள் எச்சரிக்கிறார்கள். இதனால் கோடை காலத்தில் குளிர்சாதன கருவியின் பாவனையை அதிகரித்துக் கொள்வதை விட, அதனை ஆரோக்கியத்திற்கு எந்த ஊறு விளைவிக்காமல் பாவிப்பது எப்படி? என்பதனை தெரிந்து கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் வலியுறுத்துகிறார்கள்.

வைத்தியர் ஸ்ரீதேவி

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுநீரக நீர்கட்டி பாதிப்பிற்குரிய சிகிச்சை

2026-05-12 15:01:18
news-image

டோகோஃபோபியா எனும் திருமணமான பெண்களுக்கு ஏற்படும்...

2026-05-11 16:55:02
news-image

செப்டிக் என்செலோபதி எனும் மூளை பாதிப்பிற்குரிய...

2026-05-07 16:06:06
news-image

இதய இரத்த நாள அடைப்பு பாதிப்பிற்கான...

2026-05-06 18:44:07
news-image

தைரொய்ட் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-05-05 17:56:46
news-image

டயாலிசிஸ் செய்து கொள்ளும் நோயாளிகளுக்கு பலனளிக்கும்...

2026-05-02 14:00:06
news-image

மாரடைப்பு ஏற்படுமா ? என்பதை துல்லியமாக...

2026-05-01 15:42:43
news-image

கீமோதெரபி சிகிச்சையால் பக்க விளைவுகள் ஏற்படுமா..?

2026-04-30 16:01:21
news-image

இலங்கையில் நால்வரில் ஒருவருக்கு இரைப்பை அழற்சி

2026-04-29 22:31:31
news-image

சர்க்கரை நோயாளிகள் கோடைகால வெப்பத்தை எதிர்கொள்வது...

2026-04-29 18:36:04
news-image

ஒன்றுக்கும் மேற்பட்ட இதய ரத்த நாள...

2026-04-27 16:03:52
news-image

மூளையில் ஏற்படும் காயங்களுக்கான நவீன சிகிச்சை

2026-04-25 13:06:07