சுவஸ்திகா அருள்லிங்கம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆபாச ரீதியில் கருத்துக்களை முன்வைத்துள்ளமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிமல் ரத்நாயக்க சபாநாயகரிடம் கோரிக்கை

Published By: Digital Desk 2

17 Mar, 2025 | 03:27 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆபாச ரீதியில் கருத்துக்களை முன்வைத்துள்ளமை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (17) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே சபை முதல்வர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

நிலையியல் கட்டளை 91 (உ) பிரிவுக்கமைய சபையில் உரையாற்றும் மற்றும் சபைக்கு வருகை தந்துள்ள உறுப்பினர் ஒருவரால் அவதூரான வகையிலோ அல்லது முறையற்ற வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தினாலோ சபாநாயகரால் அந்த எம்.பிக்கு அது தொடர்பில் உத்தரவிடப்பட வேண்டும். அவ்வாறு உத்தரவிடும்போது அந்த வார்த்தைகளை ஹன்சாட்டில் இருந்து நீக்குமாறு அறிவித்தலையும் விடுக்க முடியும்.

இதேவேளை சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் தொடர்பில் ஆபாச ரீதியிலான வார்த்தை வன்முறையை இங்குள்ள எம்பியொருவர் மேற்கொண்டுள்ளார் என்று பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள செய்தியொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பாராளுமன்ற நிலையியல் கட்டளை 91 (உ) பிரிவை மீறும் வகையில் குறித்த உறுப்பினர் நடந்துகொண்டுள்ளார். இதனால் இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து இந்த நிலையியல் கட்டளைக்கமையவோ அல்லது பொறுத்தமான நிலையியல் கட்டளைக்கு அமையவோ நடவடிக்கை எடுக்குமாறு உங்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாரதியை கத்தி முனையில் மிரட்டி காரை...

2025-04-21 13:36:28
news-image

வெல்லம்பிட்டியில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-04-21 12:40:16
news-image

கொத்தட்டுவ பகுதியில் ஹெரோயினுடன் ஒருவர் கைது...

2025-04-21 13:01:10
news-image

கஞ்சா செடிகளுடன் வைத்தியசாலை விடுதியின் உரிமையாளர்...

2025-04-21 13:12:03
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; வேட்புமனுக்கள்...

2025-04-21 13:02:16
news-image

மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தையும் தாயும்...

2025-04-21 12:19:26
news-image

மின்னல் தாக்கி நான்கு பிள்ளைகளின் தாய்...

2025-04-21 11:53:04
news-image

யாழ். மரியன்னை பேராலயத்தில் உயிர்த்த ஞாயிறு...

2025-04-21 12:27:15
news-image

ஹொரவ்பொத்தானையில் வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞன் கைது...

2025-04-21 11:27:32
news-image

பண்டாரவளை- பூனாகலை பிரதான வீதியில் மண்சரிவு!

2025-04-21 12:28:06
news-image

சட்டவிரோத மீன்பிடியை கட்டுப்படுத்த கோரி முல்லைத்தீவு...

2025-04-21 12:27:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு உச்சபட்ச...

2025-04-21 12:04:08