அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன - பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு

16 Mar, 2025 | 05:16 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பொலிஸ் சேவை உட்பட பாதுகாப்பு சேவை அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளதால் நாட்டில் சட்டம் என்பதொன்று கிடையாது என பாதாள குழுக்கள் கருதுகின்றன. அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட பாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன என்று ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கண்டியில்  ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

பொலிஸ் திணைக்களம் முழுமையாக அரசியல்மயமாக்கப்பட்டுள்ளது. இதன் பிரதிபலனாகவே பொலிஸ் திணைக்களத்துக்கும், பதில் பொலிஸ்மா அதிபருக்கும் இடையில் முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன.

இந்த முரண்பாடுகள் பொலிஸ் ஆணைக்குழு வரை தொடர்கிறது. இதனால் முழு பாதுகாப்பு கட்டமைப்பும் பலவீனமடைந்துள்ளது. நாட்டில் சட்டம் என்பதொன்று கிடையாது என்று ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள குழுக்கள் கருதுகின்றனர்.

தமக்கு இணக்கமானவரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக நியமிக்கும் அளவுக்கு பொலிஸ் சேவை இன்று அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் சேவை மாத்திரமல்ல, பாதுகாப்பு சேவை உட்பட புலனாய்வு பிரிவும் இன்று அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் சேவை உட்பட பாதுகாப்பு சேவைகள் இன்று அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளதால் சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்துள்ளது. பொலிஸ்மா அதிபரை கைது செய்வதற்கு பொலிஸார் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டுள்ளனர். 

இது உலக நகைச்சுவையாகும். தேசபந்து தென்னகோனை பொலிஸார் கைது செய்யமாட்டர்கள். உயர்நீதிமன்றத்தின் ஊடாக பிணை பெற்றுக்கொள்வதற்கு தேசபந்துக்கு சாதகமான சூழல் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது. அதுவரையில் அவர் கைது செய்யப்படமாட்டார்.

நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் ஐக்கிய குடியரசு முன்னணியின் சார்பில் பென்சில் சின்னத்தில் போட்டியிடுவோம் என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாத தடைச்சட்டம், நிகழ்நிலை காப்பு சட்டம்...

2025-04-30 17:52:20
news-image

எரிபொருள் விலைகளில் திருத்தம் !

2025-04-30 20:39:27
news-image

லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமில்லையாம் !

2025-04-30 20:27:40
news-image

இலங்கை - பாகிஸ்தான் இருதரப்பு பாதுகாப்பு...

2025-04-30 17:50:20
news-image

வாக்காளர் அட்டைகள் கடைகளில் மீட்பு ;...

2025-04-30 17:34:40
news-image

வெள்ளவத்தை பொதுச்சந்தை பகுதியில் தேசிய மக்கள்...

2025-04-30 18:06:00
news-image

கண்டி - கம்பளை பிரதான வீதியில்...

2025-04-30 17:28:22
news-image

முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் நீண்டகால பிரச்சினைகளை...

2025-04-30 17:38:11
news-image

தொழிற்சங்க நடவடிக்கை முன்னேடுக்க தயாராகும் தெல்லிப்பளை...

2025-04-30 17:13:54
news-image

டெங்கு நோயால் 6 பேர் உயிரிழப்பு 

2025-04-30 17:13:07
news-image

பாதுகாப்பு செயலாளர் - பாகிஸ்தான் இராணுவத்...

2025-04-30 17:01:17
news-image

மயிலத்தமடு விவசாயிகளின் பிரச்சினைக்கு நீதி கோரி...

2025-04-30 18:23:51