நடுவானில் இரண்டு விமானப் பணிப்பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்ற பயணி கைது

Published By: Digital Desk 3

16 Mar, 2025 | 11:19 AM
image

சிங்கப்பூரிலிருந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் இரண்டு பெண் விமான பணிப்பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்ற பயணி ஒருவர் விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

நேற்று சனிக்கிழமை (15) இரவு 10.00 மணியளவில் சிங்கப்பூரிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது.

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அதிக மது போதையில் இருந்த சந்தேக  நபர் இரண்டு பெண் விமான பணிப்பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயற்சி செய்துள்ளார்.

இதன்போது, விமான பணிப்பெண்கள் சம்பவத்தை விமானிக்கு தெரிவித்ததை அடுத்து, விமான  கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

விமானம் விமான நிலையத்தை வந்தடைந்ததும் சந்தேக நபர் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கட்டுநாயக்க பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பாக இரண்டு விமான பணிப்பெண்களிடமிருந்தும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நீர்கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர் அதிக அளவில் மது அருந்தி இருந்தது உறுதி செய்யப்பட்டது.

இந்த சம்பவம் இலங்கை வான்வெளியில் நடந்ததால், சந்தேக நபர் இன்று (16) கொழும்பு இலக்கம் 01 நீதவான்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டொன் பிரியசாத் உயிரிழக்கவில்லை என்கிறார் பொலிஸ்...

2025-04-22 23:28:46
news-image

தபால் மூல வாக்களிப்பின் போது அரச...

2025-04-22 20:33:09
news-image

பொருளாதார முகாமைத்துவத்துக்கு அமைச்சரவையால் விசேட குழு...

2025-04-22 17:33:04
news-image

டொன் பிரியசாத் துப்பாக்கிச் சூட்டில் காயம்!

2025-04-22 21:53:35
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியை அறிவிக்கும்...

2025-04-22 17:23:42
news-image

உள்ளூராட்சி மன்றங்களில் ஊழல், மோசடிகளுக்கு ஒருபோதும்...

2025-04-22 17:27:08
news-image

மாத்தறை சிறையில் குழப்பம் : அதிகாரிகள்...

2025-04-22 21:21:49
news-image

கட்டான பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2025-04-22 21:37:42
news-image

மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்...

2025-04-22 20:39:13
news-image

யாழ் . மாநகர சபையில் யாருக்கு...

2025-04-22 17:17:05
news-image

பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட மகனை பார்க்கசென்ற தமிழ்...

2025-04-22 20:04:55
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான பேராயரின்...

2025-04-22 17:25:48