புதுமுகங்கள் நடித்த 'மர்மர்' திரைப்படத்திற்கு படமாளிகை எண்ணிக்கை அதிகரிப்பு

Published By: Digital Desk 2

15 Mar, 2025 | 04:57 PM
image

அறிமுக இயக்குநர் ஹேம்நாத் நாராயணன் இயக்கத்தில் எஸ். பி. கே. பிக்சர்ஸ் பிரபாகரன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஹேம்நாத் நாராயணன் இயக்கத்தில் புதுமுகங்கள் நடித்த 'மர்மர்' எனும் திரைப்படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் அப்படத்தை வெளியிட்டிருக்கும் படமாளிகைகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதாக படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.

ஃபவுண்ட் ஃபுட்டேஜ் ஹாரர் ஜேனரிலான திரைப்படமான 'மர்மர்' திரைப்படம் கடந்த ஏழாம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியானது. புதுமையான திரைக்கதையால் இப்படத்திற்கு ரசிகர்கள் பேராதரவு அளித்து வருகின்றனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த படக்குழுவினர் படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவை சென்னையில் ஒருங்கிணைத்தனர். இந்த நிகழ்வில் படக்குழுவினர் அனைவரும் பங்கு பற்றினர்.

படத்தின் தயாரிப்பாளர் பிரபாகரன் பேசுகையில், '' இந்த திரைப்படம் தமிழகம் முழுவதும் நூறு திரையரங்குகளில் வெளியானது. படத்திற்கு ரசிகர்களின் பேராதரவு காரணமாக தற்போது நானூறுக்கும் மேற்பட்ட திரைகளில் 'மர்மர்' திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. தயாரிப்பாளராக இப்படத்தின் உருவாக்கிய இயக்குநர் ஹேம்நாத் நாராயணன் தலைமையிலான குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இத்திரைப்படத்தை விநியோகம் செய்த விநியோகஸ்தர் குகனுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்திற்காக சமூக வலைதள பக்கங்களில் தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்ட தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு - நடிகர் ஆர்யா உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் '' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right