பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் மனைவி மற்றும் மகனிடம் இருந்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
2023 ஆம் ஆண்டு மாத்தறை, வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றினால் கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தேசபந்து தென்னக்கோன் நீதிமன்றில் ஆஜராகாமல் தலைமறைவாக இருப்பதால் அவருக்கு எதிராக மாத்தறை நீதவான் நீதிமன்றினால் கடந்த செவ்வாய்க்கிழமை (11) பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
இதனால் தேசபந்து தென்னக்கோனை கைது செய்ய பொலிஸ் அதிகாரிகள் குழுக்களாக இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் மனைவி மற்றும் மகனிடமிருந்து கடந்த வியாழக்கிழமை (13) வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM