வெளிநாட்டில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி 13 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா மோசடி செய்ததாக கூறப்படும் பெண் ஒருவர் நாரஹேன்பிட்டி பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை (14) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு 05 பிரதேசத்தில் வசிக்கும் 45 வயதுடைய பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
பெண் ஒருவர் வெளிநாட்டில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி செய்துள்ளதாக நாரஹேன்பிட்டி பொலிஸாருக்கு மூன்று முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இது தொடர்பான விசாரணைகளுக்காக குறித்த பெண் நேற்றைய தினம் நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு எதிராக வெள்ளவத்தை, வாதுவை, மீகஹவத்த, ஹபராதுவை மற்றும் கிரியுல்ல ஆகிய பொலிஸ் நிலையங்களுக்கு பல்வேறு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நாரஹேன்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM