வெளிநாட்டில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி ; ஒருவர் கைது

15 Mar, 2025 | 12:50 PM
image

வெளிநாட்டில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி 13 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா மோசடி செய்ததாக கூறப்படும் பெண் ஒருவர் நாரஹேன்பிட்டி பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை (14) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். 

கொழும்பு 05 பிரதேசத்தில் வசிக்கும் 45 வயதுடைய பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

பெண் ஒருவர் வெளிநாட்டில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி செய்துள்ளதாக நாரஹேன்பிட்டி பொலிஸாருக்கு மூன்று முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இது தொடர்பான விசாரணைகளுக்காக குறித்த பெண் நேற்றைய தினம் நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு எதிராக வெள்ளவத்தை, வாதுவை, மீகஹவத்த, ஹபராதுவை மற்றும் கிரியுல்ல ஆகிய பொலிஸ் நிலையங்களுக்கு பல்வேறு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நாரஹேன்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டொன் பிரியசாத் உயிரிழக்கவில்லை என்கிறார் பொலிஸ்...

2025-04-22 23:28:46
news-image

தபால் மூல வாக்களிப்பின் போது அரச...

2025-04-22 20:33:09
news-image

பொருளாதார முகாமைத்துவத்துக்கு அமைச்சரவையால் விசேட குழு...

2025-04-22 17:33:04
news-image

டொன் பிரியசாத் துப்பாக்கிச் சூட்டில் காயம்!

2025-04-22 21:53:35
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியை அறிவிக்கும்...

2025-04-22 17:23:42
news-image

உள்ளூராட்சி மன்றங்களில் ஊழல், மோசடிகளுக்கு ஒருபோதும்...

2025-04-22 17:27:08
news-image

மாத்தறை சிறையில் குழப்பம் : அதிகாரிகள்...

2025-04-22 21:21:49
news-image

கட்டான பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2025-04-22 21:37:42
news-image

மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்...

2025-04-22 20:39:13
news-image

யாழ் . மாநகர சபையில் யாருக்கு...

2025-04-22 17:17:05
news-image

பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட மகனை பார்க்கசென்ற தமிழ்...

2025-04-22 20:04:55
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான பேராயரின்...

2025-04-22 17:25:48