மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மொறக்கொட்டாஞ்சேனையில் உள்ள காட்டு பகுதியில் இன்று சனிக்கிழமை (15) ஆண் சிசு ஒன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
காட்டு பகுதியில் ஆண் சிசு ஒன்று சடலமாக கிடப்பதை கண்ட பிரதேச மக்கள் பொலிஸாருக்கு உடனடியாக தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த சந்திவெளி பொலிஸார் சிசுவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
இந்த ஆண் சிசுவை பெற்றெடுத்த தாய், சிசுவை உரைப்பையில் கட்டி அதனை மொறக்கொட்டான்சேனை காட்டு பகுதியில் வீசிவிட்டு சென்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த ஆண் சிசு சம்பவதினத்தன்று பிறந்துள்ளதாகவும் சிசுவின் தாயை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM