பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை : நாளை விசேட அறிக்கையை வெளியிடவுள்ள ரணில்

Published By: Vishnu

15 Mar, 2025 | 03:05 AM
image

(எம்.மனோசித்ரா)

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளார்.

அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் மற்றும் ஆணைக்குழு முன்வைத்துள்ள பரிந்துரைகள் குறித்து அவர் கருத்து தெரிவிக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க வெள்ளிக்கிழமை (14) பாராளுமன்றத்தில் படலந்த ஆணைக்குழு அறிக்கையை சமர்ப்பித்திருந்தார். அத்தோடு அந்த அறிக்கையை சட்டமா அதிபருக்கு அனுப்பி ஆலோசனை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இது குறித்து விசேட அறிவித்தலொன்றை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படலந்த வதை முகாம் மாத்திரமின்றி நாட்டில் இடம்பெற்ற ஏனைய மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாத தடைச்சட்டம், நிகழ்நிலை காப்பு சட்டம்...

2025-04-30 17:52:20
news-image

எரிபொருள் விலைகளில் திருத்தம் !

2025-04-30 20:39:27
news-image

லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமில்லையாம் !

2025-04-30 20:27:40
news-image

இலங்கை - பாகிஸ்தான் இருதரப்பு பாதுகாப்பு...

2025-04-30 17:50:20
news-image

வாக்காளர் அட்டைகள் கடைகளில் மீட்பு ;...

2025-04-30 17:34:40
news-image

வெள்ளவத்தை பொதுச்சந்தை பகுதியில் தேசிய மக்கள்...

2025-04-30 18:06:00
news-image

கண்டி - கம்பளை பிரதான வீதியில்...

2025-04-30 17:28:22
news-image

முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் நீண்டகால பிரச்சினைகளை...

2025-04-30 17:38:11
news-image

தொழிற்சங்க நடவடிக்கை முன்னேடுக்க தயாராகும் தெல்லிப்பளை...

2025-04-30 17:13:54
news-image

டெங்கு நோயால் 6 பேர் உயிரிழப்பு 

2025-04-30 17:13:07
news-image

பாதுகாப்பு செயலாளர் - பாகிஸ்தான் இராணுவத்...

2025-04-30 17:01:17
news-image

மயிலத்தமடு விவசாயிகளின் பிரச்சினைக்கு நீதி கோரி...

2025-04-30 18:23:51