யாழ்ப்பாணம் - வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவகலைப் பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் சந்நிதியான் ஆச்சிரமத்தால் வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்படும் நிகழ்வில் நுண்கலைமானி கிமாலினி சுகந்தன் அவர்களின் தெய்வீக இன்னிசைக்கானம் இடம்பெற்றது.
இதில் ஹார்மோனிய இசையினை இசைக்கலாமணி நடேசு செல்வச்சந்திரன், மிருதங்க இசையினை கலாவித்தகர் க.சிவகுமார் தபேலா இசையினை வித்துவான் ப.கபிலன் ஆகியோர் வழங்கியிருந்தனர்.
இதேவேளை, உதவியாக கோப்பாய் தெற்கு ஞானவைரவர் ஆலயத்தின் கோரிக்கைக்கு அமைவாக, கட்டிட கட்டுமானப் பணிக்காக ரூபா 75,000 ரூபா நிதி வழங்கிவைக்கப்பட்டது.
சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி சாதனைத் தமிழன் மோகனதாஸ் சுவாமிகள் தலமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள், சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், அடியவர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
இதேவேளை, சந்நிதியான் ஆச்சிரமத்தில் மாதாந்தம் இடம்பெறும் திருவாசக முற்போதல் நிகழ்வு வெள்ளிக்கிழமை (14) சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் பல ஓதுவார்களுடன் இடம்பெற்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM