பணியிடங்களில் பெண்களை பாதுகாக்க சட்டங்கள் வலுப்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது - பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க

Published By: Vishnu

14 Mar, 2025 | 03:21 AM
image

இலங்கையில் பணியிடங்களில் பெண்களைப் பாதுகாக்கவும் வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்களை இல்லாதொழிக்கவும் சட்டங்களை வலுப்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் வியாழக்கிழமை (13) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறை மற்றும் துன்புறுத்தல்களை இல்லாதொழிப்பது தொடர்பான சர்வதேச தொழிலாளர் அமைப்பு உடன்படிக்கை அங்கீகரிக்க எதிர்பார்த்துள்ளோம்.

இந்த மாநாட்டை உடன்டிக்கையை  இலங்கை  இன்னும் அங்கீகரிக்கவில்லையென்றாலும், இந்த  உடன்படிக்கையை அங்கீகரிப்பது குறித்து பரிசீலித்து அது தொடர்பான சட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் .

நாங்கள் இதை ஒரு சட்டமாக அறிமுகப்படுத்தி, பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம், மேலும் பெண்கள் எதிர்கொள்ளும் மன அல்லது உடல் ரீதியான அனைத்து வகையான துஷ்பிரயோகங்களையும் தடுப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு...

2025-03-19 16:54:18
news-image

இன்றைய வானிலை

2025-03-20 06:14:11
news-image

தமிழ் இனப்படுகொலையை மறைக்க வேண்டாம்; பட்டலந்த...

2025-03-20 03:16:34
news-image

நான்கு மனித படுகொலைகளுடன் தொடர்புடைய  சந்தேகநபர்...

2025-03-20 03:06:26
news-image

அர்ச்சுனா எம்.பி குறித்த சபாநாயகரின் தீர்மானத்தை...

2025-03-20 02:55:15
news-image

கட்சியின் உள்ளக பிரச்சினைக்கு தீர்வு காண...

2025-03-20 02:51:31
news-image

ரணிலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது...

2025-03-19 16:04:51
news-image

பட்டலந்தவில் சித்திரவதை புரிந்தவர்களுடன் அரசாங்கத்துக்கு ‘டீல்’...

2025-03-19 17:21:51
news-image

சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காத உணவகத்திற்கு எதிராக...

2025-03-19 22:52:48
news-image

8 இலட்சத்து 33 ஆயிரம் பேருக்கு...

2025-03-19 21:51:24
news-image

போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஜோசப் ஸ்டாலின்...

2025-03-19 17:16:13
news-image

இளைஞர்களுக்கு சந்தர்ப்பமளிக்கவே இம்தியாஸ் பதவி விலகினார்...

2025-03-19 21:49:54