புதுக்குடியிருப்பு, அச்சலங்குளம் பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் நேற்று புதன்கிழமை (12) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதி அச்சலங்குளம் பகுதியில் கசிப்பு உற்பத்தி செய்யப்படுவதாகப் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வட்டுவாகல் பகுதியைச் சேர்ந்த 22, 19 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபரிடமிருந்து 418 லீற்றர் கோடா ,60 லீற்றர் கசிப்பு மற்றும் 4 பீப்பாய்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் இன்று (13) முல்லைத்தீவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர்களை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பொலிஸ் சார்ஜன் (69515) திலகரத்ன , பொலிஸ் கொஸ்தாபல்களான (72485) ஜெயசூரிய, (83141) நிரோசன், (89159 ) விஜரத்ன, ( 36841) குமார, (91451) குமார, (107058 ) டிதுர்சன், (89996) சம்பத் மற்றும் விஷேட புலனாய்வு பிரிவினர் இணைந்து இந்த சுற்றிவைளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் சந்தேக நபர்கள் நபர்கள் கைது செய்யப்படுவதுடன் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM