ரணில் தலைமைத்துவத்திலிருக்கும் வரை ஐ.தே.க.வுக்கு எழுச்சியில்லை - அஜித் பி பெரேரா

13 Mar, 2025 | 08:25 PM
image

 (எம்.மனோசித்ரா)

ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்திலுள்ள ஐக்கிய தேசிய கட்சி இன்னும் பூச்சி நிலைக்கு வீழ்ச்சியடையும். அவர் தலைமைத்துவத்திலிருக்கும் வரை அக்கட்சிக்கு எழுச்சியில்லையென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று புதன்கிழமை (13) ஊடகங்களுக்கு கருத்துவெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஐக்கிய தேசிய கட்சியுடன் கட்சி என்ற ரீதியில் நாம் கூட்டணி எதுவும் அமைக்கவில்லை. இனி அதற்கான வாய்ப்பும் இல்லை என்பது தெளிவாகியுள்ளது. எவ்வாறிருப்பினும் கீழ் மட்டத்திலுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் தற்போதைய தலைமைத்துவம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சிலரது செயற்பாடுகள் தொடர்பில் முன்னரே அறிந்து கொண்டதாலேயே நாம் அங்கிருந்து பிரிந்து சென்றோம். தலைமைத்துவத்தின் பண்பை அறிந்து கொண்டதால் தான் மிகவும் கவலையுடன் அவ்வாறானதொரு தீர்மானத்தை எடுக்க முடிந்தது.

இந்நிலையிலேயே தற்போது ஐ.தே.க.வின் சிரேஷ்ட உறுப்பினரான லக்ஷ்மன் விஜேபால புறக்கணிக்கப்பட்டிருக்கின்றார். இது கவலைக்குரிய விடயமாகும். இவ்வாறான செயற்பாடுகள் காரணமாகவே ஐ.தே.க. அரசியலில் முக்கியத்துவமற்ற கட்சியாக வீழ்ச்சியடைந்துள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்திலுள்ள ஐ.தே.க. இன்னும் பூச்சி நிலைக்கு வீழ்ச்சியடையும். ஜீவன் தொண்டமானைத் தவிர நாட்டில் வேறு எந்த பகுதியிலும்யானை சின்னத்தில் போட்டியிடவில்லை. ஜனாதிபதித் தேர்தலிலும் யானை சின்னத்தில் போட்டியிட முடியாமல் போனது. ரணில் விக்கிரமசிங்க தலைமைத்துவத்திலிருக்கும் வரை ஐ.தே.க.வுக்கு எழுச்சியில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சந்தாங்கன்னி மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நீச்சல் தடாக...

2025-03-19 04:04:47
news-image

லால் காந்தவிடமிருந்து விசாரணைகளை ஆரம்பியுங்கள் ;...

2025-03-18 14:41:18
news-image

கிரிக்கெட் சபையில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு...

2025-03-18 16:48:03
news-image

அரச செலவில் எந்தவொரு தனிப்பட்ட பயணமும்...

2025-03-18 21:40:09
news-image

கிரிக்கெட் சபையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி...

2025-03-18 16:49:04
news-image

மட்டக்களப்பில் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்கும்...

2025-03-18 22:33:07
news-image

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தில் திருத்தம்

2025-03-18 21:38:21
news-image

பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலுக்கு இணைத்துக்கொள்ள தடையாக...

2025-03-18 15:34:29
news-image

சுகாதார சேவையாளர்களின் முறையற்ற பணிப்புறக்கணிப்பு குறித்து...

2025-03-18 16:43:50
news-image

சம்மி சில்வாவுக்கு மீண்டும் தலைவர் பதவியை...

2025-03-18 17:32:34
news-image

கோட்டாவின் தீர்மானமொன்று சட்டத்திற்கு முரணானது என...

2025-03-18 21:23:44
news-image

வேலையற்ற பட்டதாரிகளின் தொழிலுக்கு உறுதியான காலவரையறை...

2025-03-18 15:42:32